வெங்கட் பிரபு படத்திற்கு வந்த சோதனை ! எலெக்ஷன் காரணமா ?
By Aravind Selvam | Galatta | May 23, 2019 19:00 PM IST
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஏற்றவாறு திரைக்கதையில் ட்விஸ்ட் அமைத்து அசத்துவதில் வல்லவர் இயக்குனர் வெங்கட் பிரபு.இயக்குனராக மட்டும் இல்லாமல் பாடகராகவும்,தயாரிப்பாளாராகவும் தனது முத்திரையை பதித்து வருகிறார் வெங்கட் பிரபு.
இவரது தயாரிப்பில் வெளியான சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகம் பெரிய வெற்றியை பெற்றது.இதனை தொடர்ந்து வைபவ் ஹீரோவாக நடித்திருக்கும் RK நகர் படத்தை தயாரித்துள்ளார் இந்த படம் முதலில் ஏப்ரல் 18ஆம் தேதி வெளிவருதாக இருந்தது அனால் அன்று எலெக்ஷன் நடைபெற்றதால் ஜூன் மாதத்திற்கு தள்ளிப்போனது.
இதனை அடுத்து சிம்புதேவன் இயக்கி வரும் கசடதபற என்ற படத்தை தயாரித்து வருகிறார்.இந்த படத்தின் அறிவிப்பை இன்று வெளியிடுவதாக இருந்தனர் படக்குழுவினர் அனால் இன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கபட்டதால் இந்த அறிவிப்பை நாளை ஒத்திவைத்தார்.