தளபதி விஜய் பட இயக்குனர் கூறிய மாஸ் அப்டேட் !
By Sakthi Priyan | Galatta | February 23, 2019 10:13 AM IST
தமிழ் சினிமாவின் ரசிகர் படையாளும் தளபதி. திரையின் முடிசூடா மன்னன் என்பதை கடந்து ரசிகர்களுக்கு உடன் பிறவா அன்னன் எனும் அந்தஸ்தை பெற்றவர் விஜய். அப்படிபட்ட நம் தளபதி விஜய் வைத்து அழகிய தமிழ் மகன், பைரவா போன்ற படங்களை தந்தவர் இயக்குனர் பரதன்.
சிறந்த இயக்குனர் என்பதை தாண்டி அசத்தலான எழுத்தாளரும் ஆவார் பரதன். தில், கில்லி, வீரம் போன்ற படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார். இவரது இயக்கத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான பைரவா படத்திற்கு பிறகு இவர் என்ன படம் செய்கிறார். அவரது தற்போதைய அப்டேட் குறித்து கேட்டு வந்தனர் திரை ரசிகர்கள்.
இதுகுறித்து அவரிடம் பேசியபோது, தனது மாஸ் கமர்ஷியல் படத்திற்கு ஸ்கிரிப்ட் மற்றும் டயலாக் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறினார். மேலும் அந்த படத்திற்கு மாஸ் ஹீரோக்களை அணுகுவதாக கூறினார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக்க உள்ளதாகவும் கூறினார்.