விஜய் டிவியின் வித்தியாசமான முயற்சியாக ஒளிபரப்பாகி ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த நிகழ்ச்சியாக மாறியது குக் வித் கோமாளி.சமையல் நிகழ்ச்சியில் காமெடியன்களை சேர்த்து கலக்கிய இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் அதீத வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த நிகழ்ச்சியின் இரண்டு சீசன்கள் நிறைவடைந்து மூன்றாவது ஒளிபரப்பாகி வருகிறது.10 போட்டியாளர்கள் மற்றும் 10 கோமாளிகளுடன் இந்த தொடர் விறுவிறுப்பாக ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.நடுவர்களாக வெங்கடேஷ் பட் மற்றும் தாமு தொடர்கின்றனர்.கோமாளிகளாக மணிமேகலை,சிவாங்கி,சுனிதா மற்றும் பாலா உள்ளிட்டோர் உள்ளனர்.

இவர்களை தவிர சக்தி,குரேஷி,சூப்பர் சிங்கர் பரத் மற்றும் மூக்குத்தி முருகன் உள்ளிட்டோர் புதிய கோமாளிகளாக இணைத்துள்ளனர்.இந்த நிகழ்ச்சி தொடங்கி சில வாரங்கள் ஆகியுள்ளது.இந்த நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.சமீபத்தில் முடிந்த எபிசோடில் நடிகை வித்யூலேகா கண்கலங்கினார் , இதனை பார்த்து பலரும் ஆறுதல் தெரிவித்தாலும் சிலர் அதனை விமர்சனம் செய்தனர்.

அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் வித்யூலேகா ஒரு வீடீயோவை பகிர்ந்துள்ளார்.வாழ்க்கையில் தனக்கு அதிகளவில் பயம் இருக்கிறது ஆனால் அதனை எதிர்கொண்டு போராடி மீண்டு வந்து ஜெயிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.இவரது இந்த வீடியோ ரசிகர்களிடம் செம வைரலாகி வருகிறது.