விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறு தற்போது படமாக திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தில் நம்பி நாராயணனாக நடிகர் மாதவன் நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவர உள்ளது. இப்படத்தை ஆனந்த் மகாதேவன் இயக்குகிறார். 

இப்படத்தின் பணிகளை சிறப்பாக முடித்து விட்டு திருப்பதிக்கு நகர்தார் நடிகர் மாதவன். தரிசனத்தை முடித்த பின் அங்கிருந்து வீடியோ பதிவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார் நம் சாக்லேட் பாய் மேடி.

இறுதிச்சுற்று, விக்ரம் வேதா படங்களுக்கு பிறகு மாதவன் நடிப்பில் தயாராகும் இப்படம் திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளது.