என்றும் தெலுங்கு சினிமா ரசிகர்களின் பேவரைட் ஹீரோவாகவும் இன்றும் தெலுங்கு திரையுலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி அவர்கள் நடிப்பில் ஒரே சமயத்தில் அடுத்தடுத்து மாஸ்ஸான திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் அடுத்து சலோ & பீஷ்மா ஆகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் வெங்கி குடுமலா இயக்கும் புதிய திரைப்படத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

முன்னதாக தமிழில் இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆக சிரஞ்சீவி நடிப்பில் தயாராகிறது போலா ஷங்கர். தமன்னா மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கும் இப்படத்தை மெஹர் ரமேஷ் இயக்குகிறார். அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குனர் பாபி என்கிற கே.எஸ்.ரவீந்திரா இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படமான #Chiru154 படத்திலும் நடிக்கிறார். 

மேலும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்து சூப்பர் ஹிட்டான லூசிபர் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் ஆக தயாராகிவரும் காட்ஃபாதர் படத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். இப்படத்தை முன்னணி தமிழ் இயக்குனர் மோகன் ராஜா இயக்கி வருகிறார். இதனிடையே முன்னணி தெலுங்கு இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி மற்றும் ராம்சரண் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ஆச்சாரியா.

ஆச்சார்யா படத்தில் காஜல் அகர்வால் மற்றும் பூஜா ஹெக்டே கதாநாயகிகளாக நடிக்க,  சோனு சூட், ஜிஷூ செங்குப்தா, சௌரவ் லோகேஷ், கிஷோர், தணிக்கெல்லா பரணி, சங்கீதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகை ரெஜினா எஸ்ரா சானா கஷ்டம் என்ற ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். ஒளிப்பதிவாளர் திரு ஒளிப்பதிவில் மணிசர்மா இசையமைத்துள்ளார்.

கோனிடெலா புரொடக்ஷன் கம்பெனி மற்றும் மேட்னி என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள ஆச்சாரியா திரைப்படத்தை முன்னணி தெலுங்கு இயக்குனர் கொரடலா சிவா எழுதி இயக்கியுள்ளார். முன்னதாக பிப்ரவரி மாதம் ஆச்சாரியா திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் & ஊரடங்கு காரணமாக தற்போது புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1-ம் தேதி ஆச்சாரியா திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.