எல்லோரும் பாகம் 3 பற்றி கேட்கிறார்கள்!- மணிரத்னம் - ARரஹ்மான் இணைந்த பொன்னியின் செல்வன் 2 ஸ்பெஷல் பேட்டி இதோ!

மணிரத்னம் - ARரஹ்மான் இணைந்த பொன்னியின் செல்வன் 2 ஸ்பெஷல் பேட்டி,Ar rahman about part 3 of mani ratnam in ponniyin selvan movie | Galatta

ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருப்பது பொன்னியின் செல்வன் 2 படத்திற்காக தான். புகழ்மிக்க எழுத்தாளர் அமரர் கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் உருவாக்கி இருக்கும் இந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பொன்னியின் செல்வனின் கதாபாத்திரங்களான ஆதித்த கரிகாலன், பொன்னியின் செல்வன் என்கிற அருள் மொழி வர்மன், வல்லவரையன் வந்தியத்தேவன், நந்தினி & ஊமைராணி, குந்தவை, ஆழ்வார்கடியான் நம்பி, பூங்குழலி, பெரிய பழுவேட்டறையர், சிறிய பழுவேட்டறையர், சுந்தர சோழர், பார்த்திபேந்திர பல்லவன், பெரிய வேளாளர் பூதி விக்ரம கேஸரி, வானதி, மதுராந்தகன், சேந்தன் அமுதன், ரவிதாசன், திருக்கோவிலூர் மலையமான், செம்பியன் மாதேவி, அனிருத்த பிரம்மராயர், வீரபாண்டியன் உள்ளிட்ட பொன்னியின் செல்வனின் மிக முக்கிய கதாபாத்திரங்களில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, இளைய திலகம் பிரபு, ஷோபிதா, ரஹ்மான், அஸ்வின் கக்கமன்னு, கிஷோர், லால், ஜெயசித்ரா, மோகன் ராமன், நாசர் ஆகியோர் நடித்துள்ளனர்.

லைகா ப்ரொடுக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் ராக்கர்ஸ் இணைந்து தயாரிக்க, தோட்டா தரணி அவர்களின் கலை இயக்கத்தில், ரவிவர்மனின் அற்புதமான ஒளிப்பதிவில், ஸ்ரீதர் பிரசாத் படத்தொகுப்பு செய்த பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்து ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து நிலையில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட இந்த 2023 ஆம் ஆண்டு கோடை விடுமுறையை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படம் உலகெங்கும் பல்வேறு மொழிகளில் ரிலீஸாக உள்ளது.

இதனிடையே நமது கலாட்டா பிளஸ் சேனலில் தேசிய விருது பெற்ற திரைப்பட விமர்சகர் திருவரத் ரங்கன் அவர்கள் உடனான நேர்காணலில் இணைந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் இயக்குனர் மணிரத்னம் இருவரும் தங்களது பயணத்தின் பல சுவாரசிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களிடம், "இப்போது நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் ஒரு வழியாக இந்த இரண்டு பாகங்கள் கொண்ட படத்தை முடித்து விட்டோம் என உணர்கிறீர்களா? அல்லது ரசிகர்கள் போல மூன்றாவது பாகம் இருந்தால் எப்படி இருக்கும் என நினைக்கிறீர்களா?" எனக் கேட்டபோது, "இது (பாகம் 3) PREQUEL-ஆக இருக்கும் என நினைக்கிறேன். எல்லோரும் கேட்கிறார்கள் ஆனால் இது அடுத்த பாகமாக இருக்காது ஒருவேளை PREQUEL-ஆக இருக்கலாம்." என ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். பொன்னியின் செல்வன் 1 மிகப்பெரிய வரவேற்பு பெற்றோர்களைத் தொடர்ந்து பொன்னின் செல்வன் 2 திரைப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு தற்போது நிலவுகிறது. நாவலின் அடிப்படையில் பார்க்கும்போது பொன்னியின் செல்வன் படமாக இரண்டு பாகங்களில் முடிவடைகிறது. ஆனாலும் இது மாதிரியான பிரம்மாண்டமான திரைப்படங்களின் அடுத்தடுத்து பாகங்களை ரசிகர்கள் எதிர்பார்ப்பதால் பொன்னியின் செல்வன் படத்திற்கு அடுத்த பாகம் என ஒன்று எடுத்தால் பொன்னியின் செல்வன் பாகம் 1,2 ஆகிய பாகங்களுக்கு முன்பு நடந்த ஒரு கதையை PREQUEL ஆக எடுப்பார்களா என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர். ஆனால் பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்கள் மட்டுமே என்பது தான் இதுவரை நிஜம்.இன்னும் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்ட இயக்குனர் மணிரத்னம் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்ட அந்த ஸ்பெஷல் பேட்டி இதோ…
 

'SK ரசிகர்களே தயாரா?'- சிவகார்த்திகேயனின் அதிரடியான மாவீரன் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு... ட்ரெண்டாகும் மிரட்டலான புது வீடியோ இதோ!
சினிமா

'SK ரசிகர்களே தயாரா?'- சிவகார்த்திகேயனின் அதிரடியான மாவீரன் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு... ட்ரெண்டாகும் மிரட்டலான புது வீடியோ இதோ!

ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த சுவாரஸ்யமான படம்... கவனத்தை ஈர்க்கும் ஃபர்ஹானா பட டீசர் இதோ!
சினிமா

ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த சுவாரஸ்யமான படம்... கவனத்தை ஈர்க்கும் ஃபர்ஹானா பட டீசர் இதோ!

'ஒரே TAKEல பண்ணாரு!'- சிலம்பரசன்TR நடிப்பில் FEEL-ஆன பிரிட்டிஷ் கேமராமேன்... மறக்க முடியாத போடா போடி பட நினைவை பகிர்ந்த விக்னேஷ் சிவன்!
சினிமா

'ஒரே TAKEல பண்ணாரு!'- சிலம்பரசன்TR நடிப்பில் FEEL-ஆன பிரிட்டிஷ் கேமராமேன்... மறக்க முடியாத போடா போடி பட நினைவை பகிர்ந்த விக்னேஷ் சிவன்!