தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் கதாநாயகிகளில் ஒருவராக தொடர்ந்து நல்ல நல்ல கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தரமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை ஆண்ட்ரியா. கடைசியாக நடிகர் சிபி சத்யராஜ் உடன் இணைந்து ஆண்ட்ரியா நடித்த வட்டம் திரைப்படம் சமீபத்தில் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீஸ் ஆனது.

முன்னதாக இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள ஹாரர் த்ரில்லர் படமான பிசாசு 2 திரைப்படத்தின்  படப்பிடிப்பு நிறைவடைந்து ரிலீஸுகாக காத்திருக்கிறது. தொடர்ந்து ஆண்ட்ரியா நடிப்பில் த்ரில்லர் படங்களாக தயாராகியுள்ள மாளிகை மற்றும் கா உள்ளிட்ட திரைப்படங்கள் நிறைவடைந்து விரைவில் ரிலீசாக காத்திருக்கின்றன.

மேலும் பிரபல நடன இயக்குனர் பாபி ஆண்டனி இயக்கத்தில் புதிய படம் மற்றும் இயக்குனர் தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம் என அடுத்தடுத்து திரைப்படங்களில் ஆண்ட்ரியா தற்போது நடித்து வருகிறார். இந்த வரிசையில் அடுத்ததாக இயக்குனர் R.கெய்சர் ஆனந்த் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள  அனல் மேலே பனித்துளி திரைப்படம் வருகிற நவம்பர் 18ஆம் தேதி நேரடியாக சோனி லைவ் OTT தளத்தில் ரிலீஸ் ஆகிறது. 

ஆண்ட்ரியா உடன் இணைந்து ஆதவ் கண்ணதாசன், அழகம் பெருமாள், அனுபமா குமார் மற்றும் இளவரசு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரிப்பில், B4U AND IVY என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வழங்கும் அனல் மேலே பனித்துளி படத்திற்கு R.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.இந்நிலையில் அனல் மேலே பனித்துளி திரைப்படத்தின் விறுவிறுப்பான ட்ரைலர் சற்று முன்பு வெளியானது. அந்த ட்ரைலர் இதோ…