மாடல் ஆக தனது மீடியா வாழ்க்கையை தொடங்கி இப்போது முன்னணி சீரியல் நடிகையாக அசத்தி வருபவர் அக்ஷிதா போபையா.நடிகையாக வேண்டும் என்ற கனவோடு மாடலிங்கை தொடங்கிய இவருக்கு கல்லூரி படிப்பை முடித்ததும் முதல் கன்னட படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.கன்னடத்தில் நடிகையாக சில படங்களில் நடித்து அசத்தினார் அக்ஷிதா போபையா.

படங்களில் நடித்துக்கொண்டே சீரியல்களிலும் நடிக்க முடிவெடுத்தார் அக்ஷிதா போபையா.தனது முதல் பட ரிலீஸுக்கு பிறகு தமிழ் சீரியலில் என்ட்ரி கொடுத்தார் அக்ஷிதா போபையா.அழகு,சுமங்கலி,தாழம்பூ உள்ளிட்ட தொடர்களில் நடித்து அசத்தினார் அக்ஷிதா போபையா.இவற்றை அடுத்து சன் டிவியில் ஒளிபரப்பாகி சக்கைபோடு போட்டு வரும் கண்ணான கண்ணே தொடரில் நடித்து வருகிறார்.

இரண்டாவது நாயகி ப்ரீத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவராக மாறினார்.இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் அக்ஷிதா போபையா பல அப்டேட்களை பகிர்ந்து வருவார்.தற்போது இவர் நடித்துள்ள முதல் தமிழ் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

Oxygen தந்தாலே என்ற படத்தில் சித்தார்த் கபிலவாயி ஹீரோவாக நடித்துள்ளார்.அக்ஷிதா போபையா இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் என்ட்ரி தருகிறார்.ஆகாஷ் கலியசாமி இந்த படத்தினை இயக்கியுள்ளார்.விஜய் ஆனந்த் இசையமைத்துள்ளளார்.இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் என்ட்ரி தரும் அக்ஷிதாவிற்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.