விவேகம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை அக்ஷரா ஹாசன். உலக நாயகன் கமல் ஹாசனின் இரண்டாவது மகளான இவர், தற்போது இயக்குனர் ராஜேஷ்.எம்.செல்வா இயக்கத்தில் சியான் விக்ரமுடன் கடரம் கொண்டான் என்ற படத்தில் நடித்து வருகிறார்.   

Akshara Haasan Recent Tweet About The Leaked Photos In Internet

அவர் கூறிய திடுக்கிடும் செய்தி என்னவென்றால், சமீபத்தில் என் தனிப்பட்ட படங்கள் சில இணையத்தில் கசிந்தன. யார் இது போன்ற காரியத்தை செய்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் ஒரு இளம் பெண்ணின் மனதை காயப்படுத்தும் நோக்கில் இச்செயல் அமைந்துள்ளது.   

இதுபோன்ற நிகழ்வுகளால் தொந்தரவாகவும், வேதனையாகவும் உள்ளதென கூறிய அக்ஷரா ஹாசன், பெண்களின் புகைப்படங்களை வைத்து தொல்லை செய்யும் மனிதர்கள் இன்னும் உள்ளனர் என்றும் கூறியுள்ளார்.   

இதையடுத்து மும்பை போலீஸ் மற்றும் சைபர்செல் உதயவியுடன் இதற்கான சரியான தீர்வை காணப்போவதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.   

மேலும் நாம் அனைவரும் நம் வாழ்வில் கண்ணியம் மற்றும் தனிமனித ஒழுக்கத்துடன் வாழ்கிறோம், இணையதளம் இது போன்ற துன்புறுத்தல் தொடர்பான காரியத்தில் ஈடுபடாது என நம்புகிறேன் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.     

பெண்களை இறைவியாய் போற்றும் இச்சமூகத்தில், இது போன்ற காரியம் ஏற்படுவது மிகுந்த வேதனையளிக்கிறது என்று கூறினால் அது மிகையாகாது.