தமிழ் சினிமாவின் ஜீனியஸ் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் NGK. அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதில் நடிகர் சூர்யாவுடன் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி, ஜகபதி பாபு போன்ற நடிகர்கள் உள்ளனர். 

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், படத்தின் இசை பணிகள் துவங்கிவிட்டது. படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு பணிகளை துவங்கிய NGK படக்குழுவினர், SonyMusicSouth நிறுவனத்துடன் இணைந்திருக்கிறார்கள்.

இப்படம் தமிழ் வருட பிறப்பின் வார இறுதியில் திரைக்கு வருகிறது. இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜனவரி முதல் வாரத்தில் நடக்கவுள்ளதாக நெருங்கிய சினிமா வட்டாரங்கள் மூலம் செய்தி வெளியாகிறது. நடிகர் சூர்யா maldives-ல் இருந்து திரும்பியவுடன் படப்பிடிப்பை துவங்க உள்ளனர்.

தற்போது இப்படத்தில் சாய் பல்லவியின் பெயர் மைதிலி என்பது உறுதியாகிவிட்டது. நடிகர் சிம்பு மற்றும் ஜோதிகா நடிப்பில் கடந்த 2004-ல் வெளிவந்த மன்மதன் படத்தில் ஹீரோயினான நடிகை ஜோதிகாவின் பெயரும் மைதிலி என்பதாகும். தமிழ் திரையுலகில் ஹீரோக்களுக்கு நிகராக ஹீரோயின்களது பெயரும் ரசிகர்கள் மத்தியில் பதிவாகிறது.