தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட நடிகை கல்யாணி... காரணம் என்ன? ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வீடியோ உள்ளே!

பிரபல நடிகை கல்யாணிக்கு தண்டுபடத்தில் அறுவை சிகிச்சை,actress kalyani undergoes major spine surgery | Galatta

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த நடிகை கல்யாணிக்கு முதுகு தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. குழந்தைக்கு நட்சத்திரமாக தமிழ் திரை உலகில் அறிமுகமாகி அள்ளித்தந்த வானம், ஸ்ரீ, ரமணா, ஜெயம் உள்ளிட்ட பல படங்களில் மிக முக்கிய வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை கல்யாணி. மேலும் 300க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த புகழ்பெற்ற நடிகை கல்யாணி தொடர்ந்து சின்னத்திரையிலும் குழந்தை நட்சத்திரமாகவும் முன்னணி கதாபாத்திரங்களிலும் பல மெகா தொடர்களில் நடித்துள்ளார். கடந்த சில மாதங்களாக இவர் எந்த சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இல்லை. 

இந்த நிலையில், தனக்கு முதுகு தண்டுவடத்தில் இருந்த பிரச்சனை குறித்தும் அதற்காக முக்கியமான அறுவை சிகிச்சை ஒன்றை மேற்கொண்டதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கமாக தெரிவித்திருக்கிறார். அந்த பதிவில், 

“கடந்த ஒன்றரை மாதமாக மிகவும் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தளர்வடைந்து போய்விட்டேன். எனது உடல் ஆரோக்கியம் மிகவும் மோசமாகிவிட்டது. என் ஆரோக்கியத்தை பற்றி சிறிதாக சொல்கிறேன், நான் 2016 ஒரு  தண்டுவட அறுவை சிகிச்சை மேற்கொண்டேன் அதற்குப் பிறகு நான் சில வருடங்கள் நன்றாக தான் இருந்தேன்... அப்போது தான் என் மகள் நவ்யாவை பெற்றெடுத்தேன். இந்த கடந்த ஆறு மாதங்களாக என் தண்டுவடத்தில் மீண்டும் அதே வலி வர ஆரம்பித்துவிட்டது... நாங்கள் ஒரு தண்டுவட நிபுணரிடம் ஆலோசனைக்கு சென்றோம். அப்போதுதான் நான் கேட்கவே மாட்டேன் என்று நினைத்த ஒரு விஷயத்தை திரும்பவும் கேட்டேன். அவர் என்ன சொன்னார் என்றால், என் முந்தைய அறுவை சிகிச்சையில் அந்த காயங்கள் இன்னும் ஆறவில்லை என்றும் நான் இன்னொரு முறை அதே அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இம்முறை அந்த ஸ்க்ரூக்களையும் பிளேட்களையும் எடுத்துவிட்டு இன்னொருவருடைய எலும்பை என் முதுகு தண்டுவடத்தில் பொருத்த வேண்டும் என்று சொன்னார்... இந்த முறை அதிலிருந்து மீண்டு வருவதற்கு மிக நீண்ட நாட்கள் தேவைப்படும் என்று சொன்னார். ஆனால் என் உடன் இருந்த அனைத்து மருத்துவர்கள் குழுவிற்கு நான் மிகவும் நன்றி கடன் பட்டிருக்கிறேன்... அதோடு என் கணவர் ரோஹித் அரவிந்த் ஆக்சன் என்னுடன் இந்த வலியிலும் அனைத்து கட்டங்களிலும் என் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு என்னுடன் நின்றதற்கும் முக்கியமாக என் 5 வயது மகள் நவ்யா கொடுத்த அளவு கடந்த பாசமும்... என்னுடைய இந்த நிலையின் மீது அவள் கொண்ட அளவு கடந்த புரிதலை என்னால் நம்பவே முடியவில்லை. நான் கடக்க வேண்டிய பாதை இன்னும் தூரம் இருக்கிறது ஆனால் நான் இருக்கும் குடும்பத்திற்கு நான் மிகவும் நன்றி கடன் பட்டிருக்கிறேன். இனிமேல் என் உடலை நான் எதற்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன் இதனால் தான் நான் சோசியல் மீடியாவில் இவ்வளவு நாள் ஆக்டிவ்வாக இல்லை.”

என தெரிவித்து மருத்துவமனையில் சிகிச்சை பெரும் புகைப்படம் மற்றும் வீடியோவை நடிகை கல்யாணி வெளியிட்டுள்ளார். ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அந்த வீடியோ இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Kalyani Rohit (@kalyanirohit)