மீண்டும் இணையும் சூர்யா ஜோதிகா ! ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு இதோ
By Aravind Selvam | Galatta | February 11, 2019 16:26 PM IST
தமிழ் சினிமா நடிகைகளில் தனக்கென ஒரு தனி இடத்தையும்,தனி ரசிகர் பட்டாளத்தையும் பெற்றவர் ஜோதிகா.கடந்த ஆண்டும் செக்கச் சிவந்த வானம்,மகளிர் மட்டும் என இரண்டு வெற்றி படங்களை தந்தார்.
இதற்கு அடுத்து இவரது அடுத்த பட அறிவிப்பை எதிர்நோக்கி அவரது ரசிகர்களும்,திரைத்துறையும் இருந்தது.இந்நிலையில் இன்று தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஜோதிகா.
36 வயதினிலே,மகளிர் மட்டும் படங்களை தொடர்ந்து சூர்யாவின் 2D நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. குலேபகாவலி படத்தை இயக்கிய கல்யாண் இந்த படத்தை இயக்குகிறார்.விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் .யோகிபாபு,ரேவதி,ஆனந்த்ராஜ்,மன்சூர் அலி கான் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
சென்னையில் இந்த படம் பூஜையுடன் தொடங்கியது,இதில் ஜோதிகா,சூர்யா,ரேவதி உள்ளிட்ட முக்கிய படக்குழுவினர் கலந்துகொண்டனர்.இது முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.