இவர்களால் சினிமா துறைக்கே அசிங்கம் - தியாகராஜன் !
By Sakthi Priyan | Galatta | October 24, 2018 14:08 PM IST
தமிழ் சினிமாவை தலை நிமிர்த்தியவர்களில் ஒருவரான இயக்குனர் மற்றும் நடிகரான தியாகராஜன் அவர்களின் பெயர் தற்போது மீ டு ஹாஷ்டகில் அடிபட்டு வருகிறது.
மும்பையை சேர்ந்த க்ரித்திகா மேனன் என்ற 21 வயது பெண் தியாகராஜன் அவர்களுக்கு உதவியாளராக பணிபுரிந்ததாகவும், அந்த பெண் ஹோட்டல் அறையில் உடல் நிலையின்றி தங்கியிருந்த தருணத்தில் பாலியல் தொந்தரவு தரும் விதத்தில் தியாகராஜன் நடந்து கொண்டதாக அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதற்க்கு மறுப்பு கூறிய தியாகராஜன், தான் சம்பாதித்த 50 ஆண்டு கால நற்பெயரை சீரழிக்கும் வகையில் அப்பெண் நடந்துகொண்டதாகவும், மேலும் அவதூறாக செய்தி பரப்பிய க்ரித்திகா மேனன் மீது மான நஷ்ட வழக்கும் தொடுக்க உள்ளதாக அறிவித்தார்.
இவ்விஷயம் அறிந்தவுடன் க்ரித்திகா மேனன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட செய்திகளை அழித்ததாகவும் பின்பு அவரது அக்கௌன்ட்டையும் அழித்துவிட்டு சென்றதால் இவ்விஷயம் முற்றிலும் பொய் என அறிவித்து கண்டனம் தெரிவித்தார் தியாகராஜன்.
தற்போது உள்ள இணையதள வளர்ச்சிக்கு இந்த மீ டு பெரிதும் உபயோகமாகும். ஆனால் இது போன்ற பெண்மணியால் ஒட்டு மொத்த சினிமா துறைக்கும் கெட்ட பெயர் என்றும் அறிவித்துள்ளார்.