மலையாளம் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் துல்கர் சல்மான்.மலையாளம் சினிமா மட்டுமின்றி தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் ஜொலித்து தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக தொடர் வெற்றிகளால் அவதரித்தார் துல்கர் சல்மான்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான குரூப் திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்றிருந்தன.தென்னிந்திய மொழிகளை தாண்டி ஹிந்தியிலும் சில முன்னணி நட்சத்திரங்களோடு ஜோடி போட்டு நடித்து அசத்தியுள்ளார் துல்கர்.அடுத்ததாக இவர் நடித்துள்ள ஹே சினாமிகா,சல்யூட் உள்ளிட்ட படங்கள் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளன.

ஹே சினாமிகா படம் பிப்ரவரி மாதம் வெளியாகவுள்ளது,இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இவர் நடித்த சல்யூட் படத்தின் ரிலீஸ் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தற்போது துல்கர் சல்மான் தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதை சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.ஏற்கனவே இவரது தந்தை மம்முட்டிக்கு கொரோனா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.துல்கர் விரைவில் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனைகளை தெரிவித்து வருகின்றனர்.