பா.இரஞ்சித் அவர்களின் நீலம் ப்ரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் திரைப்படத்தை பார்த்து தனது ட்விட்டர் தளத்தில் புகழ்ந்து தள்ளியுள்ளார். நடிகர்கள் கதிர், ஆனந்தி, யோகிபாபு போன்ற நடிகர்கள் நடித்துள்ள இப்படம் சமூகத்திற்கு மிக ஆழமான கருத்தை உணர்த்தியது என்பது அனைவரும் அறிந்தது.  

Actor Dhanush Appreciated The Pariyerum Perumal Team And Gave An Announcement Regarding His Next

படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் மாரி செல்வராஜை புகழ்ந்து தள்ளிய தனுஷ், அவரின் இயக்கத்தில் நடிக்கவும் உள்ளார் என்ற செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். மேலும் பெரியேறும் பெருமாள் படத்தின் கதாநாயகன் கதிரின் நடிப்பை பாராட்டியுள்ளார். இனி அவர் நடிக்கும் படங்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.   

இப்பதிவுக்கு நன்றி கூறும் வகையில் நடிகர் கதிர் போட்ட ட்வீட்டில், மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தில் உங்களுடன் மற்றும் வி. கிரியேஷன்ஸ் உடன் பணிபுரிவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். சிறந்த நடிகர்கள் இணைந்து நடிப்பது சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.