இயற்கை எய்திய மணிரத்னம் பட நடிகர் ! திரை துறையினர் அதிர்ச்சி
By Sakthi Priyan | Galatta | May 18, 2019 13:00 PM IST
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ரல்லபல்லி வெங்கட நரசிம்ம ராவ், கடந்த மே 16-ம் தேதி நுரையீரல் பாதிப்பால் இயற்கை எய்தினார். 73 வயதான இவர் நுரையீரல் பாதிப்பின் காரணமாக மருத்துவமனைக்கு 16-ம் தேதி காலை கொண்டு சேர்க்கப்பட்டார். பின் சிகிச்சை பலனின்றி காலமானார்.
ரல்லபல்லி 800 படங்களுக்கு மேல் தெலுங்கில் நடித்துள்ளார். 1960-ல் மேடை கலைஞராக திரை பயணத்தை மேற்கொண்டவர்.
லெஜெண்ட்ரி இயக்குனர் மணிரத்னம் இயக்கிய பாம்பே படத்தில் திருநங்கையாக நடித்து அசத்தியிருப்பார். ஐந்து முறை நந்தி விருது பெற்ற நடிகர் எனும் அந்தஸ்தை பெற்றவர். இவரது இழப்பு அனைத்து திரைதுறையினருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.