ரஜினி படத்திற்கு கூடுதல் வலு ! 27 ஆண்டுகளுக்கு பின் அமைந்த விஷயம்
By Sakthi Priyan | Galatta | February 11, 2019 09:23 AM IST
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் டாப் நடிகர்களான அஜித், விஜய், சூர்யா, விஜயகாந்த் என பலரையும் வைத்து படம் இயக்கிவிட்டார். சமீபத்தில் தளபதி விஜய்யுடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து சர்கார் படத்தை இயக்கி அதில் வெற்றியை ருசித்தார்.
இதை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படம் ஒன்றை இயக்க உள்ளார். மேலும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் என்பது சமீபத்தில் தெரியவந்தது.
பேட்ட படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டாருக்கு இரண்டாவது முறையாக இசையமைக்கப்போகிறார். நடிகர் யோகிபாபு இப்படத்தில் இணைந்துள்ளார் என்ற செய்தி சமீபத்தில் வெளியானது.
தற்போது படத்தின் ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன் ட்விட்டரில், தளபதி படத்திற்கு பின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் பணிபுரிவது மிகவும் உற்சாகமாக உள்ளது என பதிவு செய்திருக்கிறார்.
Finally 😃🤗 very excited to work with Rajini Sir after Thalapathy 😃
— SantoshSivanASC. ISC (@santoshsivan) February 10, 2019
இயக்குனர் மணிரத்னம் இயக்கிய தளபதி படத்திற்கு சந்தோஷ்சிவன் தான் ஒளிப்பதிவாளர் என்பது நாம் அறிந்தவையே. 27 ஆண்டுகளுக்கு பின்னர் சூப்பர்ஸ்டாரை திரையில் எப்படி பிரதிபலிக்கப்போகிறார் என்ற ஆர்வத்தில் உள்ளனர் ரசிகர்கள்.