தொலைக்காட்சி பிரபலங்களில் கோபிநாத் என்றால் தெரியாத நபர்களே இருக்க இயலாது. தொலைக்காட்சி நிகழ்ச்சியாக இருக்கட்டும், விருது விழாவாக இருக்கட்டும் கோபிநாத்திற்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர் எனும் அந்தஸ்தை பெற்றவர் நடிகர் அஜித். இதுவரை அஜித்குமாரை நேர்காணல் கண்டவர்கள் ஒருசிலர் மட்டுமே. அதில் கோபிநாத்தும் ஒருவர். அவர் நம் கலாட்டா குழுவிற்கு தந்த பேட்டியில் இதுகுறித்து விவரித்து கூறியுள்ளார். 

Ace And Popular Programe Host Gopinath Shares His Opinion About Interviewing Ajith

இயல்பாகவே ஒரு நல்ல மனிதர் அஜித். நன்றாக நினைவு உள்ளது, நேர்காணல் ஹோட்டல் Green Park-ல் நடந்தது. அவர் பேசுகையில் வார்தைகளை தேர்வு செய்து தேர்வு செய்து சென்றார். மிகவும் நிதானமாக பேசத்துவங்கினார். இரண்டு கேமரா செட்டப் உள்ளது நிச்சயம் நல்ல கேள்விகளோடு பயணிப்பேன், நீங்கள் என்னை நம்பலாம் என்றாராம் கோபிநாத். 

Ace And Popular Programe Host Gopinath Shares His Opinion About Interviewing Ajith

கேமரா ஆஃப் நிலையில் உள்ள போது அஜித் கூறியது, ஆரம்ப காலத்தில் எனக்கு அவ்வளவு தமிழ் வராது, தமிழ் நடிகர் தமிழில் பேசவில்லை என்பார்கள். மொழி சரியாக வரவில்லை என்று ஆங்கிலத்தில் பேசத் துவங்கினேன், ஆங்கிலத்தில் பேசுகிறாரே என்று விமர்சித்தார்கள்.

Ace And Popular Programe Host Gopinath Shares His Opinion About Interviewing Ajith

இதை யாரிடம் கேட்டு திருத்திக்கொள்வது, அதற்கு கூட நமக்கு பின்னணி பலம் யாருமில்லையே என்று கூறினாராம் அஜித். நானாக தான் சரி, தப்பு என்று தீர்மானித்து வரவேண்டும். பேசாமல் இருந்தால் பெரிய இவரு, பேசாமயே இருக்கிறார் என்றார்கள். ஏதாவது எதார்த்த வார்த்தை கூறினால் அதை வைத்தே பத்திரிக்கையில் தவறாக பதிவு செய்து விடுகிறார்கள் என்றாராம்.

Ace And Popular Programe Host Gopinath Shares His Opinion About Interviewing Ajith

இதற்காகவே கோபிநாத் எதார்த்தமான கேள்விகளை எழுப்பினாராம். மேலும் வேறங்காவது நிகழ்ச்சியில் சந்தித்தால் நினைவு வைத்து நன்றாக இருக்கிறீர்களா என்று கேட்பார். இவ்வாறு அஜித் குறித்து கூறினார் கோபிநாத்.