ஈரோடு மாவட்டத்தில் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’  என்ற தலைப்பில் 3வது நாளாக நேற்று தி.மு.க. மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. பிரசாரத்தில் ஈடுபட்டார். மொடக்குறிச்சியில் ஐடிபிஎல். எரிவாயு குழாய் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளை சந்தித்து கோரிக்கைகளை  கேட்டறிந்தார். 

அங்கு நடந்த கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசிய போது, ``விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்கு எதிராக விவசாயிகள் கடுமையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  ஆனால் அந்த சட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரவேற்றார். தன்னை விவசாயி எனக் கூறிக்கொண்டு விவசாயிகளை ஏமாற்றி வருகிறார்.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்ததன் மூலம் விவசாயிகளுக்கு அதிமுக அரசு பச்சை துரோகத்தை செய்துள்ளது. திமுக ஆட்சி அமைந்ததும் விவசாயிகள் தெரிவித்துள்ள கோரிக்கைகள் அனைத்தும்  நிறைவேற்றப்படும்.  அதிமுக., ஆட்சி எப்போது முடிவுக்கு வரும், திமுக எப்போது ஆட்சிக்கு வரும் என்று மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். திமுக ஆட்சிக்கு வந்ததும் மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்

நாளைக்கு தோ்தல் வைத்தாலும் மக்களுக்கு மகிழ்ச்சிதான். இந்த ஆட்சி எப்போது முடியும் என மக்கள் காத்துக்கொண்டுள்ளனா். திமுக சாா்பில் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டோம். முதல்வா், இன்று (டிசம்பர் 3) என்னை பாா்த்து கேட்கிறாா் பாா்வை கோளாறா என்று கேட்டிருக்கிறார். எனக்கு பாா்வை கோளாறு இருந்துட்டுப்போகட்டும், பிரச்சனை இல்லை. ஆனால் மக்களுக்கே கோளாறாக முதல்வா் வந்துள்ளாா். ஒவ்வொரு திட்டத்திற்கும் அடிக்கல் மட்டுமே நாட்டப்படுகிறது திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. அதை முதல்வரே கூறுகிறாா். ஸ்டாலினை பாா்த்து அறிக்கை நாயகன் என்று கூறுகிறாா். அரசாணை நாயகன் என்று நாங்கள் கூறலாமா? வெறும் அரசாணை மட்டுமே வருகிறது.

இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு துரோகம் செய்பவா் தான் முதல்வா் பழனிச்சாமி. அதிமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் ஆர்வமாக உள்ளனர். நாளைக்கே தேர்தல் வைத்தாலும் திமுகவிற்கு வாக்களிக்க தயாராக உள்ளனர். இது டெண்டர் ஆட்சி. நெடுஞ்சாலை டெண்டர்கள் அனைத்தும் முதல்வரின் உறவினர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. பள்ளிகள் திறப்பது குறித்தும் பாடத்திட்டங்கள் குறைப்பது குறித்தும் முதலில் குழு அமைத்தது ஸ்டாலின்தான்.

40 ஆண்டு கால மூத்த அமைச்சர் செங்கோட்டையன் இன்று சுயமாக முடிவெடுக்க முடியாமல் பழனிச்சாமி முன் கைக்கட்டி நிற்கிறார். அவரை நினைத்தால் பாவமாக உள்ளது. எந்த முடிவு எடுத்தாலும் முதல்வர் தான் அறிவிப்பார் என கூறுவதற்கு பள்ளி கல்வித்துறைக்கென தனி அமைச்சர் தேவையா?. கல்வியை காவியாக்கும் ஆட்சியாகவும் பாஜகவின் கைக்கூலி அடிமைகள் ஆட்சி தான் தமிழகத்தில் நடந்து வருகிறது. அமித்ஷா என்ன சொல்கிறரோ அதனை அப்படியே செய்து வருகிறார் முதல்வர். ஏழை மாணவர்களுக்காக 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை பெற்று தந்தவர் ஸ்டாலின்!" என்று பேசினார்.

2 ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில், திமுக விரைவில் சிக்குவார் என்று முதல்வர் இன்று பேசியிருந்தார். மேலும் திமுக-வை ஊழல் கட்சி என்றும் விமர்சித்திருந்தார். அந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில், தி.மு.க எம்.பி ஆ.ராசா ``தி.மு.க மீது அ.தி.மு.கவும், முதல்வரும் வைக்கும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கத் தயாரா? 2-ஜி வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதை முதல்வர் விளக்கத் தயாரா? தி.மு.க ஊழல் கட்சியா, அ.தி.மு.க ஊழல் கட்சியா எனத் தலைமைச் செயலகத்தில் நான் விவாதிக்கத் தயார். நீங்கள் தயாரா? அ.தி.மு.க தொடர்ந்த எந்த வழக்கிலும் தி.மு.கவினர் தண்டிக்கப்படவில்லை. அரசியல் சட்டத்தை படுகொலை செய்த ஜெயலலிதா படத்தை வைத்து ஆட்சி செய்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று திமுக எம்.பி. ஆ.ராசா பதிலடி கொடுத்துள்ளார். மேலும், நாடே எதிர்க்கும் வேளாண் சட்டத்தில் தவறு இல்லை என்கிறார் பழனிசாமி, 3 வேளாண் சட்டத்திலும் குறைந்த பட்ச ஆதார விலை என்ற வார்த்தை எங்காவது உள்ளதா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.