திருப்பூர் அருகே தங்கிப் படிக்கும் குழந்தைகளுக்கு, நிறுவனரே பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் அன்பு இல்லத்தின் கீழ், விவேகானந்த குருகுலத்தின் உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது. 6 ஆம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில், 62  ஏழை குழந்தைகள் அங்கேயே தங்கிப் படித்து வருகின்றனர். 

Tirupur orphanage children sexual harassment

இந்நிலையில், அன்பு இல்லத்தின் நிறுவனர் 50 வயதான ராஜசேகர், தங்கிப் படித்து வரும் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக, குழந்தைகளின் பெற்றோர்கள் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக, திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலவாரியத்திலும் அவர்கள் புகார் அளித்தனர்.

இதனையடுத்து, குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் அன்பு இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் இதுபற்றி விசாரித்தனர். இதில், அன்பு இல்லத்தின் நிறுவனர் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

Tirupur orphanage children sexual harassment

இதனால், அன்பு இல்லத்திலிருந்து 62 குழந்தைகளையும், வேறொரு இடத்திற்கு அதிகாரிகளே இடம் மாற்றினர். மேலும், இது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள  அன்பு இல்லத்தின் நிறுவனர் ராஜசேகரைத் தேடிவருகின்றனர். இதனிடையே, திருப்பூரில் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.