2018 இறுதியில் வெளியாகி இந்தியா முழுவதும் வசூல் சாதனை படைத்த படம் KGF.யாஷ் ஹீரோவாக நடிக்க,
ஸ்ரீநிதி ஷெட்டி அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.பிரசாந்த் நீல் இந்த படத்தை இயக்கி இருந்தார்.தமிழ்,தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி என பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இந்த படம் வெளியிடப்பட்டது.இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது.இந்த படத்தின் ரிலீஸை ஒட்டுமொத்த இந்தியாவுமே ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறது,இதற்கு காரணம் கே.ஜி.எப் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் பெற்ற வரவேற்பே காரணம்.

இந்த படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரங்களில் ஒன்றான அதிரா என்ற கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார்.ரவீனா டாண்டன்,ரமேஷ் ராவ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ள்ளனர்.கொரோனா காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போயுள்ளது.இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடுக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படம் குறித்த முக்கிய தகவலை பிரபல பாலிவுட் நடிகையும்,இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளவருமான ரவீனா டாண்டன் தெரிவித்துள்ளார்.பாலிவுட்டின் பிரபல மீடியாக்களில் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் இந்த படத்தில் பவர்புல்லான அரசியல் தலைவர் வேடத்தில் நடித்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.இந்த படத்தில் தனது கதாபாத்திரம் தான் ஹீரோ,தனது காதாபாத்திரம் தான் வில்லி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தன்னை சுற்றி கதை நகரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.அவர் கூறியதை வைத்து பார்க்கையில் படத்தின் நாயகன் யாஷிற்கும் அவருக்கும் அனல் பறக்கும் சில காட்சிகள் இருக்கும் என்று தெரிகிறது.விரைவில் இந்த கொரோனா பாதிப்பு குறைந்து திரையரங்குகள் திறக்கப்பட்டு இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.