தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மக்களின் மனம் கவர்ந்த முக்கிய நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ்.இதுவரை நடந்து முடிந்த மூன்று சீசனும் பெரிய வெற்றியை பெற்றதோடு, நல்ல TRPயையும் பெற்றிருந்தது.இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.கமல்ஹாசனின் அரசியல் வசனங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த தொடரில் பங்கேற்ற பிரபலங்கள் பட்டி தொட்டி எங்கும் உள்ள மக்களின் ஆதரவை பெற்று நட்சத்திரங்களாக உயர்ந்துள்ளனர்.இதன் முதல் சீசன் தொடங்கப்பட்டபோது பலரும் ஆர்வத்தோடு இந்த தொடரை பார்க்க ஆரம்பித்தனர்.ஓவியா,ஆரவ்,கஞ்சா கருப்பு,பரணி,பொன்னம்பலம்,வையாபுரி,காயத்ரி ரகுராம்,ஹரிஷ் கல்யாண்,பிந்து மாதவி,ரைசா,சினேகன் என்று பலரும் இந்த தொடரில் பங்கேற்ற அனைவரும் இந்த தொடரை மிகவும் பிரபலமாக்கினர்.ஆரவின் மருத்துவ முத்தம்,ஓவியாவின் தைரியமான பேச்சு மற்றும் தற்கொலை முயற்சி,எல்லாத்துக்கும் பரணி தான் காரணாம் என்ற கஞ்சா கருப்பின் டயலாக்,பிக்பாஸ் வீட்டில் இருந்து எஸ்கேப் ஆக முயற்சி செய்த பரணி,சினேஹானின் கட்டிப்புடி வைத்தியம்,ஓவியா ஆர்மி என்று பல சுவாரசிய நிகழ்வுகளோடு தொடங்கியது இந்த நிகழ்ச்சி.இவற்றோடு கமலின் வார்த்தை விளையாட்டுகளும் சேர்ந்துகொள்ள மக்கள் மனதில் ஒரு முக்கிய இடத்தை பிடித்து சிம்மாசனம் போட்டு சிறந்த நிகழ்ச்சியாக அமர்ந்தது பிக்பாஸ்.

முதல் சீசனின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து,அடுத்த வருடம் சீசன் 2 தொடங்கியது ,சீசன் 1-லிலேயே இவ்வளவு பரபரப்பு இருக்க சீசன் 2 மட்டும் குறைச்சலாக இருக்குமா என்ன என்று ரசிகர் யார் யார் பங்கெடுக்கிறார்கள் என்பதிலேயே மிகவும் ஆர்வமாக இருந்தனர்.யாஷிகா ஆனந்த்,மஹத்,ஜனனி ஐயர்,ரித்விகா,தாடி பாலாஜி,சென்றாயன்,மும்தாஜ்,ஐஸ்வர்யா தத்தா என்று களைகட்டியது பிக்பாஸ் 2.மஹத்-யாஷிகாவின் காதல்,பாலாஜியின் குடும்ப விவகாரம் என்று மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது இரண்டாவது சீசன்.

அதுதான் எல்லாமே பண்ணிட்டீங்களே என்று ரசிகர்கள் பெருமூச்சு விடுவதற்குள் ,அடுத்த சீசன் தொடங்கியது.இந்த சீசன் தொடக்கத்தில் ஷெரின்,சாண்டி,கவின்,லாஸ்லியா,தர்ஷன்,சேரன்,சரவணன்,மதுமிதா,வனிதா என்று கலகலப்பாகவே தொடங்கியது ஆனால் போக போக கவின்-லாஸ்லியா காதல் விவகாரம்,சேரன்-சரவணன் வாக்குவாதம்,மதுமிதாவின் தற்கொலை முயற்சி,வனிதாவின் கொளுத்திப்போடும் குணம் என்று தொடர் பரபரப்பாக சென்று அதிக TRP-யை அள்ளியது.

கொரோனா தாக்கத்தால் ஷூட்டிங்குகள் பாதிக்கப்பட்டுள்ளதால் ஜூலையில் நடைபெறவிருந்த இந்த தொடரின் ஷூட்டிங் தள்ளிப்போனது.பிக்பாஸ் 4 தமிழ் அக்டோபர் 4ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமாக தொடங்கியது.

இந்த தொடரில் பிரபல நடிகை ரம்யா பாண்டியன் கலந்துகொள்கிறார்.விஜய் டிவியின் குக் வித் கோமாளி தொடரில் மிகவும் பிரபலமானவராக மாறிய இவர் தற்போது மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்கியுள்ளார்.பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் முன் தனது கடைசி வீடீயோவை அவர் வெளியிட்டுள்ளார்.தனக்கு இதுவரை ஆதரவு அளித்து வந்த ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு தரவேண்டும் என்று தெரிவித்துள்ளார் ரம்யா.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#Biggboss4 @actress_ramyapandian @priyadharshini.makeupartist

A post shared by Mani❤ (@mani_hairstylist) on

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Dear Insta fam! 😊 Your unconditional love and support has been my driving force. I must say I've been immensely blessed. As I start my #bigboss4tamil journey as a contestant, I hope you continue to shower me with your blessings. I can't thank you enough. Until next time ❤️ . #ramyapandian #bigboss4tamil Note : Posting this on behalf of Ramya Pandian #teamramyapandian

A post shared by Ramya Pandian (@actress_ramyapandian) on