தெலுங்கு சினிமாவில் தனக்கென ஒரு தனி ரசிகர்ப்பட்டாளத்தை கொண்டுள்ளவர் பவர் ஸ்டார் பவன் கல்யாண்.கடைசியாக 2018-ல் வெளியான Agnyaathavaasi படத்தில் நடித்திருந்தார்.இதனை அடுத்து படங்களில் நடிப்பதை தவிர்த்து ஜன சேனா பார்ட்டியில் முழுவதுமாக ஈடுபட்டார்.2019 லோக்சபா தேர்தலில் தனது ஜன சேனா கட்சி சார்பில் இரண்டு இடங்களில் போட்டியிட்டார்.

கடந்த சில ஆண்டுகளாக தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த பவன் கல்யாண் ஒரு சிறிய பிரேக்கிற்கு பிறகு மீண்டும்  வக்கீல் சாப் படத்தில் நடிக்கத்தொடங்கினார்.இந்த படம் ஏப்ரல் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து Hari Hara Veera Mallu என்ற சரித்திர படத்திலும்,தனது கப்பார் சிங் இயக்குனர் ஹரிஷுடன் PSPK 28 படத்திலும் நடித்து வருகிறார் பவன் கல்யாண்.அடுத்ததாக ராணாவுடன் இணைந்து மலையாளத்தில் சூப்பர்ஹிட் ஆன அய்யப்பனுக்கு கோஷியும் படத்தில் நடிக்கவிருந்தார்.இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனவால் தள்ளிப்போயுள்ளது.

PSPK 28 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக்கை தெலுங்கு வருடப்பிறப்பு அன்று வெளியிட திட்டமிட்டிருந்ததாகவும்.கொரோனா காரணமாக வெளியிடமுடியவில்லை என்றும் படக்குழுவினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.மேலும் பல தேவையற்ற வதந்திகள் சுற்றி வருகின்றன அவற்றை நம்பவேண்டாம் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்றும் தெரிவித்துள்ளனர்.