சாண்டியிடம் மன்னிப்பு கேட்ட கவின் !
By Sakthi Priyan | Galatta | September 20, 2019 17:00 PM IST
பிக்பாஸ் வீட்டின் என்பத்தி ஒன்பதாம் நாளான இன்று வெளியான மூன்றாம் ப்ரோமோவில், சாண்டியை குறை கூறிய கவின், அவரது அருமை புரிந்து மன்னிப்பு கேட்கிறார். என்னால் இப்படி இருக்க முடியவில்லை என்று சாண்டி வெளிப்படையாக கூறினார். தங்கமுட்டையை பாதுகாக்கும் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் வெற்றி பெறுபவர்கள் இறுதி போட்டிக்கு செல்வதற்கான ஃபினாலே டிக்கெட்டை பெறலாம்.
பிக்பாஸ் வீட்டிற்கு வருவதற்கு முன்பே, சாண்டியும் கவினும் நல்ல நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. டாஸ்க் துவங்கிய போதே லாஸ்லியாவிற்கு ஆதரவாக கவின் செயல்படுவது அனைவருக்கும் வெறுப்பை வரச்செய்கிறது.
சாண்டியுடன் இணைந்து தர்ஷன் மற்றும் முகென் செயல்படுகிறார் என்ற எண்ணத்தை தவிர்த்தார் கவின்.
#Day89 #Promo3 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/H37Ii9Ge6t
— Vijay Television (@vijaytelevision) September 20, 2019