திரையுலகிற்கு பல எதார்த்தமான படைப்புகளை, ஆழமான கருத்துடன் தந்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த இயக்குனர் செல்வராகவன். இவரது படங்கள் வெறும் படங்களாக இல்லாமல், பாடமாகவும் இருந்து வருகிறது. தனது தரமான ஸ்கிரிப்ட்டுகள் மூலம் தமிழ் சினிமாவின் ஜீனியஸ் என்று அழைக்கப்படுகிறார். திரைக்கும் ரசிகர்களுக்கும் உள்ள தூரத்தை குறைப்பதில் இவருக்கு நிகர் இவரே. 

இதையடுத்து புதுப்பேட்டை படத்தின் அடுத்த பாகத்தை இயக்க இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் கல்லூரி விழா ஒன்றில் பேசிய செல்வராகவன் இதைத் தெரிவித்திருந்தார். 

கடந்த 2011-ம் ஆண்டு செல்வராகவன் கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். செல்வராகவன் இயக்கிய மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் படத்தில் கீதாஞ்சலி உதவி இயக்குனராக பணியாற்றிய போது இருவருக்கும் காதல் மலர்ந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2016-ம் ஆண்டு மாலை நேரத்து மயக்கம் என்ற படத்தை இயக்கியிருந்தார் கீதாஞ்சலி. 

இந்த தம்பதிக்கு இரண்டு அழகான குழந்தைகள் உள்ளது. அவர்களது பெயர் லீலாவதி மற்றும் ஓம்கார். தற்போது மூன்றாம் குழந்தையை எதிர்பார்க்கின்றனர் இந்த தம்பதி. இதுகுறித்து கீதாஞ்சலி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், கர்பமாக இருப்பதாக கூறி புகைப்படம் ஒன்றை பதிவு செய்திருந்தார். இதை கண்ட ரசிகர்கள், தங்களது வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர். 17 வாரங்கள் என அதில் கீதாஞ்சலி குறிப்பிட்டிருந்தார். 

பொதுவாக செல்வராகவனின் படங்களில் வரும் ஹீரோயின்கள் வலிமையாக இருப்பார்கள். பெண்களின் சக்தியை பிரதிபலிக்கும் விதமாக செல்வராகவன் காட்சிகளை அமைத்திருப்பார். செல்வராகனின் இந்த வெற்றிக்கு எப்படி அவரது திறமை முக்கிய பங்கு வகிக்கிறதோ, அதே போல் அவரது துணைவியார் கீதாஞ்சலி அவர்களுக்கும் பங்குள்ளது. இந்த தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமை கொள்கிறது நம் கலாட்டா.