பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 90 நாட்களை கடந்து வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் போட்டியாளர்களின் டாஸ்க் மற்றும் நாமினேஷன் ஆர்வம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால் வரும் சண்டைகளும் ஏராளம். பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் பாலாஜி பழைய நிலைக்கு திருப்பிவிட்டதால் அவர் ஆரியுடன் மிக கேவலமாக கத்தி பொருட்களை தூக்கி போட்டு தனது கோபத்தினை வெளிப்படுத்தினார். 

ஷிவானி பிரச்சனை பற்றி பேசியதற்காக பாலாஜிக்கும் ஆரிக்கும் பெரிய சண்டை நடந்தது. நீ வெளியே இருந்தால் கிடைக்கும் மரியாதையே வேற என மிரட்டும் தொனியில் பாலாஜி ஆரியிடம் பேசினார். அதன் பின் தான் வீட்டுக்கும் அகம் டிவி வழியாக பேச தொடங்கினார கமல். ஷிவானி மட்டும் இந்த வாரம் மிகவும் சோகமாகவே இருந்த நிலையில் அவரது அம்மாவை வீடியோ கால் மூலமாக ஷிவானியுடன் பேச வைத்தார் கமல். ஷிவானி அம்மாவை எதிர்த்து பேசாமல் இருந்தது அன்பின் வெளிப்பாடு என கமல் கூறினார். 

அதன் பின் உங்கள் சுமைகளை குழந்தைகள் மீது இறக்கி வைக்காதீர்கள் என அட்வைஸும் கொடுத்தார் கமல். பின்னர் பாலாஜி - ஆரி பிரச்சனைக்கு வந்தார் கமல். ஆரியை மட்டும் தனியாக எழுந்து அமரவைத்துவிட்டு மற்றவர்களிடம் அவருடன் உங்களுக்கு என்ன பிரச்சனை என கேட்டார் கமல். ஒவ்வொருவராக தங்கள் பிரச்சனையா கூறினர்.

பாலாஜியும் தன் பங்கிற்கு அவர் எப்போதும் குறை கூறிக்கொண்டே இருக்கிறார் என குற்றம்சாட்டினார், அதன் பின் தான் பாலாஜியை விளாச தொடங்கினர் கமல், அவர் இந்த வாரம் மிக மோசமாக சண்டை போட்டது பற்றியும் விமர்சித்தார். இரண்டடி ஏறினால் ஒன்றரை அடி சருக்குகிறார் என கிண்டல் செய்தார். எல்லைமீறிய பாலாஜியை கமல் இன்று வெளுத்து வாங்கிவிட்டார் என்றும் சொல்லலாம்.

இந்த வாரம் வீட்டுக்கு வந்த உங்கள் குடும்பத்தினர் ஆரியை பற்றி மறைமுகமாக ஹிண்ட் கொடுத்தார்கள். அதை நீங்கள் மாற்றி எடுத்துக்கொண்டீர்களோ என்றும் கமல் மற்ற போட்டியாளர்களை கேட்டார். பாலாஜி ஆரியை மோசமாக பேசும்வரை சும்மா இருந்துவிட்டு. அதன்பின் ஆரி எதாவது பேச தொடங்கினால் அவரை ரம்யா கூட்டிச்சென்றுவிடுகிறார் என கமல் கூறினார். இதன் மூலமாக பாலாஜிக்கு ஜால்ரா அடித்து கொண்டிருந்த ரம்யாவுக்கும் ஒரு பெரிய குட்டு வைத்திருக்கிறார் கமல்.

ஆரி மட்டும் ஜெயிக்கக்கூடாது என பாலாஜி நினைப்பது எப்படி நல்ல போட்டியாக இருக்கும் என கமல் கோபத்துடன் கேட்டார். அது மட்டுமின்றி ஆரியையும் கமல் பாராட்டி பேசினார். ஆரி பற்றி மற்றவர்கள் சொன்ன குறையை அவர் விரும்பினால் திருத்திக்கொள்ளலாம் என கமல் கூறினார். அதன் பின் நாமினேஷனில் இருந்து கேபியை கமல் காப்பாற்றினார். மீதம் இருப்பவர்களில் யார் வெளியே போவது என நாளை தெரியவரும். அது யாரா இருக்கும்னு அதுவரை கெஸ் பன்னிட்டே இருங்க.

இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில், கன்ஃபெஷன் ரூமில் கண்கலங்கிய படி காணப்பட்டார் பாலாஜி. கோவத்த மட்டுமே பார்த்து வளந்திருக்கேன் என்றும், நல்லது கெட்டது கூற யாரும் இல்லை என்று கூறினார். மக்களும் சரி, மக்களின் பிரதிநிதியான கமல் சாரும் கண்டித்தால் ஏற்றுக்கொள்வேன் என்று கூறியுள்ளார்.