தமிழ் சினிமாவில் தனது விடாமுயற்சியால் தடம் பதித்தவர் அருண் விஜய்.இவர் கடைசியாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் தயாராகியிருந்த மாஃபியா படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தில் பிரசன்னா ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.ப்ரியா பவானி ஷங்கர் இந்த படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார்.இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.

மாஃபியா படத்தின் ரிலீஸை தொடர்ந்து அருண்விஜய் சினம்,பாக்ஸர்,அக்னி சிறகுகள்,பார்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.சினம் படத்தை நினைத்தாலே இனிக்கும்,ஹரிதாஸ் உள்ளிட்ட படங்களை இயக்கிய GNR குமரவேலன் இயக்குகிறார்.குப்பத்து ராஜா,சிக்ஸர் உள்ளிட்ட படங்களில் நடித்த Palak Lalwani இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இந்த படத்தில் அருண் விஜய் போலீசாக நடித்துள்ளார்.கொரோனா காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.இந்த படத்தின் டீஸர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல ஹிட் அடித்துள்ளது.

தற்போது நிலைமை கொஞ்சம் சரி ஆகி வரும் வேளையில் , இந்த படம் திரையரங்குகள் திறக்கப்பட்டதும் முதல் படமாக வெளியாகும் என்று படத்தின் நாயகன் அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.திரையரங்குகள் திறக்கப்பட்டதும் வெளியாகவுள்ள முதல் தமிழ் படமாக இந்த படம் அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியிலும் திரைத்துறையினர் மத்தியிலும் உற்சாகத்தினை அளித்துள்ளது.