கைது செய்யப்பட்ட நடிகைகள் சஞ்சனா கல்ராணி மற்றும் ராகிணி திவேதி மோதல் ! போலீசார் சமாதானம்
By Sakthi Priyan | Galatta | September 10, 2020 10:57 AM IST
கன்னட திரை உலகில் போதைப்பொருட்கள் பயன்படுத்தியது மற்றும் விற்பனை செய்த விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விவகாரத்தில் கன்னட திரை உலகை சேர்ந்த 15 நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்களுக்கு தொடர்பு இருப்பதாக இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் தெரிவித்திருந்தார்.
அதன்படி, விசாரணை நடத்திய போலீசார் நடிகை ராகிணி திவேதியை கடந்த 4-ந் தேதி கைது செய்தனர். இதுதவிர நடிகை சஞ்சனா கல்ராணியின் நண்பர் ராகுல், ராகிணி திவேதியின் நண்பர் ரவிசங்கர், வீரேன் கண்ணா, ப்ரீத்வி ஷெட்டி, லோயம் பெப்பர் சம்பா, பிரசாந்த் ரங்கா, நயாஷ் உள்ளிட்டரை கைது செய்துள்ளனர். மேலும் நேற்று முன்தினம் போதைப்பொருள் விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக நடிகை சஞ்சனா கல்ராணியும் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட 14 பேர் மீது காட்டன் பேட்டை போலீஸ் நிலையத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. போதைப்பொருள் விவகாரத்தில் கைதாகி உள்ள ராகுல் மற்றும் ப்ரீத்வி ஷெட்டி ஆகிய 2 பேரும் கொடுத்த தகவலின் பேரில் தான் நடிகை சஞ்சனா கல்ராணி போலீசாரிடம் சிக்கி இருந்தார்.
தற்போது நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகிய 2 பேரும் சித்தாபுரா அருகே உள்ள மகளிர் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், நேற்று நடிகைகள் 2 பேரிடமும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினார்கள். குறிப்பாக போதைப்பொருட்கள் பயன்படுத்துவதற்காக எந்தெந்த விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டீர்கள்?, போதைப்பொருட்களை சப்ளை செய்தவர்கள் யார்?, விருந்து நிகழ்ச்சிகள் யாரெல்லாம் கலந்து கொண்டார்கள்?. போதைப்பொருள் விவகாரத்தில் கன்னட திரை உலகத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் யாருக்கு எல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணியிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதையடுத்து, நடிகைகள் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதாக கூறப்படும் ரெசார்ட் ஓட்டல்களின் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்திருப்பதாகவும் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் விவகாரத்தில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கைது செய்யப்பட்டுள்ள நடிகைகள் ராகிணி திவேதிக்கும் சஞ்சனா கல்ராணிக்கும் ஏற்கனவே பிரச்னை இருந்தது போல் தெரிகிறது. இந்நிலையில் லாக்கப்பில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. லைட்டை அணைப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இவர்கள் போட்ட சண்டையை அடுத்து பெண் போலீசார் சமாதானம் செய்ய முற்பட்டதாகவும் அவர்களையும் இருவரும் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
Jayam Ravi's Bhoomi - First Single Song Video | Tamizhan Endru Sollada
10/09/2020 11:00 AM
VIRAL: New video from Thalapathy Vijay's Master | Lokesh Kanagaraj
10/09/2020 10:31 AM