தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகைகளில் ஒருவர் நடிகை ஜோதிகா. தன் அழகான சிரிப்பாலும் சிறந்த நடிப்பாலும் தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே கொண்டுள்ள நடிகை ஜோதிகா நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்டார். தொடர்ந்து திருமணத்திற்கு பிறகு கதாநாயகிகளை மையப்படுத்தும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அந்தவகையில் கடைசியாக நடிகை ஜோதிகா நடிப்பில் பொன்மகள் வந்தாள் திரைப்படம் வெளியானது. அதனை தொடர்ந்து தற்போது நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள உடன்பிறப்பே திரைப்படம் விரைவில் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் தற்போது நடிகை ஜோதிகா முதன்முறையாக தனது இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கியுள்ளார். இதுவரை சமூக வலைதளங்களில் எந்த கணக்குகளும் இல்லாமல் இருந்த நடிகை ஜோதிகாவின் இந்த சோசியல் மீடியா வருகையை தமிழ் சினிமா ரசிகர்களும் பிரபலங்களும் வரவேற்றுள்ளனர்.

சமீபத்தில் இமயமலைக்கு நடிகை ஜோதிகா பயணம் செய்து வந்த புகைப்படங்களை தனது முதல் பதிவாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு தனது வருகையை தெரிவித்த ஜோதிகாவை வரவேற்கும் விதமாக நடிகர் சூர்யா “என் மனைவி மிக உறுதியானவள் உன்னை இன்ஸ்டாகிராமில் பார்ப்பது உற்சாகமாக இருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார். நடிகை ஜோதிகாவின் இந்த இன்ஸ்டாகிராம் வருகை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jyotika (@jyotika)