உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் தீவிரமாக இருக்கும் நிலையில், தடுப்பூசிகளுக்குத் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. உலகளவில் மேலும் 5 நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளன. விரைவில் அந்த தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வர உள்ளன. 

இதனையொட்டி அமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனமும் கோவிட் 19 தடுப்பு மருந்தைத் தயாரித்து பயன்பாட்டுக்கு விடப்பட்டன. 

இந்நிலையில் ஒரே டோஸாக செலுத்தக்கூடிய இந்த தடுப்பூசி, அமெரிக்காவில் 68 லட்சம் பேருக்கு மேல் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த தடுப்பூசி போட்டுக்கொண்ட 6 பெண்களுக்கு ரத்தம் உறைதல் ஏற்பட்டதுள்ளது. 

இதனால் இதுகுறித்து விசாரணை முடியும் வரை ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு விதிக்க அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து வாரியம் அரசுக்கு தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் அக்டோபர் மாதத்திற்குள் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என மத்திய அரசு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.