கடந்த சில தினங்களாகவே மொபைலின் செயலிகள் தடை செய்யப்பட்டு வருவது வாடிக்கையாகி இருக்கிறது. இந்தியாவில்  டிக்டாக், யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு அதிரடி தடை விதித்து சமீபத்தில் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்திய சீன எல்லையில் நடந்த சம்பவங்களின் தொடர்ச்சியாகத்தான் இவையாவும் செய்யப்பட்டன என சொல்லப்பட்டு வந்த நிலையில், `பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்த தடை விதிக்கப்பட்டது' என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் செயலிகள் மீதான தடைகள் விதிக்கப்படுவது குறிவது ஆலோசிக்கப்பட்டது. அனைத்து நாடுகளுமே பாதுகாப்பையே காரணம் காட்டியதை தொடர்ந்து, டிக்டாக் உள்ளிட்ட சில செயலிகள் தங்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதாக மக்களுக்கு உறுதியளித்தன.

இதற்கிடையில், சில தினங்களுக்கு முன், இந்திய ராணுவ வீரர்கள் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட 89 செயலிகளை தங்களது ஸ்மார்ட்போன்களிலிருந்து நீக்குமாறு இந்திய ராணுவம் உத்தரவிட்டிருந்தது. இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, அரசின் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி தடை செய்யப்பட்ட செயலிகள் இருப்பதாக சொல்லப்பட்டது. 

இந்திய ராணுவம் தகவல்கள் கசிவதை தடுக்கும் வகையில், வீரர்களை தங்களது ஸ்மார்ட்போன்களில் இருந்து நீக்க உத்தரவிட்டுள்ள அந்த செயலிகள் பட்டியலில்  ஃபேஸ்புக், டிக்டாக், ட்ரூ காலர், இன்ஸ்டாகிராம், வி சாட், ஹலோ சாட், ஷேர் சாட், வைபர், ஹைக், ஷேர் ஹிட், செண்டெர், சமோசா, கவாலி, சாப்யா, யூசி பிரவுசெர், யுசி பிரசெர் மினி, ஷூம், கேம் ஸ்கேன்னர், பியூட்டி பிளஸ், பப்ஜி, கிளாஸ் ஆஃப் கிங்ஸ், மொபைல் லிஜெண்ட்ஸ், கிளப் ஃபேக்டரி, அலி எக்ஸ்பிரஸ், டிண்டெர், ஒகே கப்பிட், பாடோ, பம்பிள், டெய்லி ஹண்ட், நியூஸ் டாக், 360 செக்யூரிட்டி, ஸ்நாப் சாட், தம்பிர், ரெட்டிட், ஹங்காமா உள்ளிட்ட 89 செயலிகள் இடம்பெற்றிருந்தன.

தடையை மீறி ராணுவ வீரர்கள் யாரேனும் இந்த செயலிகளை உபயோகப்படுத்தினால், அவர்கள் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவர் என்று எச்சரிக்கையும் விடப்பட்டது.

இந்த தடை விதிக்கப்பட்டு, சில தினங்களே ஆகியிருக்கும் நிலையில் கூகுள் நிறுவனம் தற்போது தன் பயனர்களை மோசடி செய்ய பயன்படுத்தப்பட்ட 11 மொபைல் பயன்பாடுகளை அதன் பிளே ஸ்டோர்களில் இருந்து நீக்கியுள்ளது. இந்த பயன்பாடுகள் அனைத்தும் பிரபலமான Joker தீம்பொருள் மூலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவை அனைத்தையும், கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் கூகுள் நிறுவனம் கண்காணித்து வந்ததாக சொல்லப்படுகிரது. 

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இந்த ஜோக்கர் தீம்பொருள் (Joker Malware) செயலிகள் புதிய வடிவத்தில் இருந்தது. இதன் சிறப்பு என்னவென்றால், அனுமதியின்றி, இந்த பயன்பாடுகள் மூலம் பிரீமியம் சேவைகளுக்கு பலரை ஒன்றாக இணைத்து ஹேக்கர்கள் செயல்படலாம். ஹேக்கர்கள், பல புதிய நபர்களை சேர்த்து, பிரிமியமாக இவற்றை மாற்றவும் வாய்ப்பிருந்திருக்கிறது. மேலும் பயனர்களின் அனுமதியின்றி அவர்களின் கணக்கில் இருந்து பணம் எடுக்கும் மோசடி வேலைகளும் நிகழ்ந்திருக்கிறது.

அறிக்கையின்படி, இந்த பயன்பாடுகள் கூகுளின் பிளே ஸ்டோர் (Google Play Store) பாதுகாப்புக்கு கட்டுப்படாமல்  இவ்வளவு காலமாகத் தவிர்த்து வருகின்றன. இருப்பினும் கூகுள் இப்போதுதான் அவற்றை ஆதாரபூர்வமாக கண்டறிந்து ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், பயனர்கள் இந்த பயன்பாடுகளை உடனடியாக நீக்கிவிடவும் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், கூகுள் 1700 பயன்பாடுகளின் பட்டியலை வெளியிட்டது. அவை பிளே ஸ்டோரிலிருந்து அகற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பயன்பாடுகளில் ஜோக்கர் தீம்பொருளும் இடம் பெற்றிருந்தது.

இப்போது நீக்கப்பட்டிருக்கும், அந்த 11 பயன்பாடுகளின் முழு பட்டியல் இங்கே உங்களுக்காக... இந்த பயன்பாடுகள் ஏதேனும் உங்கள் தொலைபேசியில் இருந்தால், உடனடியாக அதை நீக்கவும்.

com.imagecompress.android
com.contact.withme.texts
com.hmvoice.friendsms
com.relax.relaxation.androidsms
com.cheery.message.sendsms (दो अलग-अलग रूप)
com.peason.lovinglovemessage
com.file.recovefiles
com.LPlocker.lockapps
com.remindme.alram
com.training.memorygame

- பெ.மதலை ஆரோன்.