“கொரோனாவை ஆயுதமாக்க கடந்த 2015 ஆம் ஆண்டிலேயே சீனா ஆலோசித்தது” என்று புதிதாகக் கிடைத்துள்ள ஆதாரங்களால், உலக நாடுகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளன.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், மனித குலத்துக்கு மாபெரும் அச்சுறுத்தலாக மாறி இருக்கிறது. 

அத்துடன், சீனாவிலிருந்து பரவ தொடங்கியதாகக் கூறப்படும் கொரோனா வைரஸ், கடந்த ஆண்டே சுமார் 200 நாடுகளுக்கு மேல் பரவியிருந்தது. இதனால், கடந்த ஆண்டே உலகம் முழுவதும் சுமார் 300 கோடிக்கும் மேலான மக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கிப்போனார்கள். உலக அளவில் ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரமும், உலக பொருளாதாரமும் வரலாறு காண வீழ்ச்சி கண்டது.

அத்துடன், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் சுகாதார அமைப்புகளையே உடைந்து நொறுங்கி உள்ளது. முக்கியமாக, இந்தியாவில் கொரோனாவின் 2 ஆம் அலையானது, தலைவிரித்தாடுகிறது. இதனால், மத்திய - மாநில அரசுகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இப்படியாக, உலகையே அஞ்சி நடுங்க வைக்கும் கொரோனா வைரஸ் சீனாவில் தான் தோன்றியது என்றும், சீனாவின் வூஹானில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் தோன்றியதாகவும் பல்வேறு சர்ச்சைகள் வெடித்தன. ஆனால், இதனை சீனா தொடர்ந்து மறுத்து வந்தது. 

இந்த நிலையில் தான், “கடந்த 2015 ஆம் ஆண்டிலேயே சீன விஞ்ஞானிகள் சார்ஸ் கொரோனா வைரசை 'புதிய யுக மரபணு ஆயுதங்கள்' என்று வர்ணித்தது” தெரிய வந்திருக்கிறது. 

அதாவது, “ஆபத்தான வைரஸ்களை செயற்கையாக உருவாக்கி அதை உயிரி ஆயுதமாகப் பயன்படுத்த” சீனா திட்டமிட்டது தற்போது தெரிய வந்திருக்கிறது.

குறிப்பாக, “கொரோனா வைரஸ் கிரிமியை, உயிரி ஆயுதமாக்கி மனித நோய் வைரசாக உருவாக்கி, அதனை வெளி உலகில் பரவவிடுவது பற்றி விவாதித்தது” இப்போது தெரியவந்திருக்கிறது. இந்த செய்தியை, 'வீக் எண்ட் ஆஸ்திரேலியன்' என்ற, ஊடகம் வெளியிட்டு உறுதிப்படுத்தி இருக்கிறது.

அதன் படி, “The Unnatural Origin of SARS and New Species of Man-Made Viruses as Genetic Bioweapons” என்று, இந்தக் கட்டுரையின் தலைப்பிட்டு அந்த செய்தி நிறுவனம் உலகத்திற்குத் தெரியப்படுத்தி இருக்கிறது. 

அந்த கட்டுரையில், “சீன ராணுவ விஞ்ஞானிகள் இந்த வைரசை ஆயுதமாக்கி, மனித உயிர்களிடையே பரவவிடுவது பற்றி விவாதித்து உள்ளனர்” என்று, பகிரங்கமாகக் குற்றம்சாட்டி உள்ளது. 

மிக முக்கியமாக, இந்த கட்டுரையானது, “3 ஆம் உலகப்போரை உயிரி ஆயுதம் மூலம் நடத்தத் திட்டமிட்டிருப்பது” தெரிய வந்திருக்கிறது.

“இது தொடர்பான ரகசிய ஆவணங்கள், அமெரிக்க வெளியுறவுத் துறைக்குக் கிடைத்துள்ளதாகவும், அதில், இந்த வைரஸை போர் ஆயுதமாகப் பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர்” என்றும், ஆஸ்திரேலியாவின் செய்தி ஊடகம் வெளியிட்டுள்ளது.

“போரில் பயன்படுத்துவதற்காக மட்டுமல்லாமல், தன்னை எதிர்க்கும் நாடுகள் மீதும் கொரோனாவை ஏவி விட திட்டமிடப்பட்டு உள்ளதும், கொரோனா வைரஸ் இயற்கையானதாகத் தோன்றும் அளவுக்கு ஆய்வுகள் இருக்க வேண்டும் என்பதற்காக, அதன் ஆய்வுகளும் அமைந்திருந்தன” என்றும், அதில் கூறப்பட்டு உள்ளது.

“கொரோனா வைரசை சீனாதான் உருவாக்கியது என்பதை, எதிர்காலத்தில் உலக நாடுகள் கண்டுபிடித்து விடக்கூடாது என்றும், அதனையும் மீறி உலக நாடுகள் குற்றஞ்சாட்டினாலும், அதை ஆணித்தரமாக மறுக்கும் அளவுக்கு இயற்கையானதாக அந்த வைரஸைக் காட்டும் ஆய்வுகள் இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாகவும்” அந்த கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

“தற்போது கசிந்துள்ள இந்த ஆவணத்தை ஆய்வு செய்த சைபர் செக்யூரிட்டி ஸ்பெஷலிஸ்ட் ராபர்ட் பாட்டர், 'இந்த ஆவணங்கள் நிச்சயம் போலியானவை அல்ல' என்று, ஆஸ்திரேலிய ஊடகத்துக்குத் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக ஆஸ்திரேலிய ஸ்ட்ராடெஜிக் பாலிசி நிறுவனத்தின் பீட்டர் ஜெனிங்ஸ் கருத்து கூறும்போது, “இந்த கண்டுபிடிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், பல்வேறு கொரோனா வைரஸ் மாதிரிகளை ராணுவப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்துவது பற்றியும் அதை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது  பற்றியும் பேசியுள்ளனர், எப்படிச் சிந்தித்துள்ளனர் என்பதற்கான ஆதாரம் இது தான்” என்றும், அவர் விளக்கி உள்ளார். 

இது, உலக நாடுகளை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இதனால், இந்த செய்திகள் அனைத்தும் உண்மையா என்பதனை உலக நாடுகள் தற்போது உறுதி செய்து வருகின்றன. இதனால், என்ன செய்வது என்று தெரியாமல் தற்போது சீனா இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.