சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘மாவீரன்’. இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் பேண்டசி ஆக்ஷன் திரைப்படமாக உருவான மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதிதி ஷங்கர், இயக்குனர் மிஷ்கின், தெலுங்கு நடிகர் சுனில், சரிதா, யோகி பாபு ஆகியோர் நடித்து வெளியான மாவீரன் திரைப்படம் தமிழ் மட்டுமல்லாமல் தெளுங்குளும் மகாவீரடு என்ற பெயரில் வெளியானது. ரசிகர்களின் எதிர்பார்ப்பின் மத்தியில் இன்று ஆரவார கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியான மாவீரன் திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே பெருவாரிய நேர்மறையான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் இன்று படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் சென்னை வெற்றி திரையரங்கில் ரசிகர்களுடன் முதல் நாள் முதல் காட்சியை பார்த்து உள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் படம் பார்த்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த சிவகார்த்திகேயன், “மாவீரன் படம் ஒரு பேண்டஸி ஆக்கஷன் திரைப்படம். ஒரு புதுவிதமான கதைக்களத்தோட இந்தஸபடம் ஒரு பண்ணிருக்கோம். என்னதான் புது முயற்சி சொன்னாலும் தியேட்டரில் மக்கள் என்ன வரவேற்பு கொடுக்குறாங்க னு தான் முக்கியம். அதுக்கு தான் நாங்க ஆவலாக இருந்தோம். நாங்க எந்த இடத்தில் எந்த காட்சிக்கு ரசிகர்கள் ஆராவரத்தோடு வரவேற்பு கொடுப்பாங்கனு நினைச்சோமோ அந்த இடத்தில் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்திருக்காங்க. எனக்கே சில இடங்களில் புல்லரிச்சிது.. “ என்றார்.

அதை தொடர்ந்து ரஜினிகாந்த் பட டைட்டில் வைத்தது குறித்து கேட்கையில், “எனக்கு ரஜினி சார் பட டைட்டில் வெச்சதுல என்ன சந்தோஷம் னா இரண்டு முறை ரஜினி சார் பட டைட்டில் வைக்கும்போது அந்த டைட்டிலுக்குண்டான மரியாதையை கொடுத்திருக்கோம். அதற்கு நியாயம் சேர்த்திருக்கோம்.” என்றார் சிவகார்த்திகேயன். பின்னர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடந்த ஜூன் 29ம் தேதி வெளியான மாமன்னன் படத்திற்கான காட்சிகளுக்கும் மாவீரன் படத்திற்கான காட்சிகளும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் எப்படி பிரித்துள்ளது என்ற கேள்விக்கு, “மாமன்னன் படம் இரண்டு வாரம் நல்ல கலெக்ஷன் பார்த்துடுச்சு. இனனும் அந்த படம் நல்லா போகுது. அதே நேரத்தில் மாவீரன் படத்திற்கும் நிறைய காட்சிகள் கொடுத்திருக்காங்க.. மாவீரம் படம் பார்த்து உதய் சார் போன் பண்ணி பேசினார். படம் குறித்து பாராட்டினார். அவருக்கும் ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கு நன்றிகள்” என்றார் நடிகர் சிவகார்த்திகேயன்.