விஜய் டிவியில் கடந்த 2011 ல் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற தொடர் சரவணன் மீனாட்சி. கிட்டத்தட்ட ஆயிரக்கணாக்கான எபிசோட்களை கடந்து பிரைம் டைமில் அனைவராலும் கவரப்பட்ட இந்த தொடர் மூன்று சீரிஸ்களாக உருவாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

இதில் முதல் சீசனில் சரவணன் மீனாட்சியாக மிர்ச்சி செந்தில் ஸ்ரீஜா நடித்தனர். திரையில் அவர்களின் காதல் காட்சிக்கே ஒரு ரசிகர் பட்டாளம் உருவாக்கினர் .அதற்கு முன்பே விஜய் டிவியின் மற்றுமொரு தொடரான மதுர சீரியலில் ஜோடியாக நடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் 2016 ல் ஒளிப்பரப்பான மாப்பிள்ளை சீரியலிலும் இணைந்தனர். அதுவரை இருவரும் திரையில் ஜோடியாக வந்தவர்கள் 2014 ல் திருமணம் செய்து கொண்டனர். இதுகுறித்து இருவரின் ரசிகர்களும் வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியினையும் தெரிவித்தனர்.

அதன்பின் செந்தில் மட்டும் தொடர்களில் நடிக்க ஸ்ரீஜா தொடரில் இருந்து ஒதுங்கி கொண்டார். பின் இணைய தொடர்களில் இருவரும் இணைந்து நடித்தும் வந்தனர். செந்திலின் நய்யாண்டித்தனத்திற்கும் குறும்புக்கும் அதை கண்டிக்கும் ஸ்ரீஜாவுக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இன்று வரை இருந்து வருகிறது. செந்தில் ஆரம்பகாலக் கட்டத்தில் ரேடியோ தொகுப்பாளராக பணியாற்றினார். அதே நேரத்தில் 'தவமாய் தவமிருந்து' , 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' போன்ற படங்களிலும் குணசித்திர வேடங்களில் நடித்து வந்துள்ளார். மேலும் 'பப்பாளி' , 'வெண்ணிலா வீடு' , 'ரொம்ப நல்லவன் டா நீ' போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது ஜீ தமிழ், விஜய் டிவி, கலர்ஸ் போன்ற முன்னணி தொலைகாட்சியிலும் அவ்வப்போது தொகுப்பாளராக செந்தில் வந்தாலும் அனைவராலும் மிர்ச்சி செந்திலாகவே அறியப்பட்டார்.

இந்நிலையில் திருமணம் முடிந்து எட்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் மிர்ச்சி செந்தில் ஸ்ரீஜா தம்பதியினருக்க்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து “பெற்றோர்களாக பிறந்திருக்கிறோம் என் மகனால்” என்று ஆண் மகன் பிறந்ததை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியினை பகிர்ந்து கொண்டார்.

இதனையடுத்து அவர்களது ரசிகர்கள் மற்றும் நடிகை சினேகா உள்ளிட்ட திரை பிரபலங்கள் அவர்களுக்கு வாழ்த்துகளையும் மகிழ்ச்சியினையும் தெரிவித்து வருகின்றனர்.