அஜித் நடிப்பில் வங்கி கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘துணிவு’ படம் வரும் பொங்கலையொட்டி ஜனவரி 11 அன்று திரைக்கு வரவிருக்கின்றது.  ரசிகர்களின் ஆர்வத்தை நாளுக்கு நாள் கூட்டுமளவு அடுத்தடுத்த செய்திகள் முதல் பார்வை தொடங்கி பாடல்கள், டிரைலர் என மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது இந்நிலையில்  துணிவு பட கதாநாயகி மஞ்சு வாரியார் நமது கலாட்டாவிற்கு அளித்த பேட்டியில் துணிவு படம் குறித்தும் படப்பிடிப்பு தளத்தில் நடந்த சுவாரஸ்யமான தகவல் குறித்தும் பகிர்ந்து கொண்டார். இதனையடுத்து துணிவு படத்தின் சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். படத்தில் இடம்பெற்றுள்ள ‘காசே தான் கடவுளடா’ பாடல் லிரிக் வீடியோவில் தன் குரல் இல்லை என்பது குறித்து வைரலான மீம்கள் பற்றி அவர் பேசுகையில்,

“அந்த பாடலில் என் குரல் இல்லை என்று வைரலான மீம்களை எனது நண்பர்கள் எனக்கு அனுப்பினர். ஆரம்பத்தில் எனக்கு அவையெல்லாம் புரியவில்லை பின்பே எனக்கு புரிந்தது அந்த லிரிக் வீடியோவில் என் குரல் இடம் பெறவில்லை என்று, அதன் பின்  என்னை பற்றி வந்த மீம்கள் எனக்கே சிரிப்பு வரவைத்தது. அதன் பின் ஜிப்ரான் சாருக்கும் வினோத் சாருக்கும் அனுப்பினேன்”

பின் பாடல் பதிவு தருணத்தில் நிகழ்ந்ததை பற்றி பேசினார், அதில் “முதலில் அந்த பாடல் என் குரல் இல்லாமல் பதிவு செய்து விட்டனர் . அதன் பின் படபிடிப்பின் போது என்னை வைத்து சில வரிகள் படமாக்கினர். அதன் பின் படமாக்க பட்ட எனது குரல் பகுதிக்கு வேறு ஒரு பாடகரை பாட வைக்க திட்டமிட்டனர். அதன் பின் ஜிப்ரான் சார் என் குரலிலே அந்த பகுதி இருக்கணும்னு நினைத்தார் அதன் பின் என் குரல் பதிவு செய்யப்பட்டது. அதன் பின் லிரிக் வீடியோ வில் எனது குரல் இல்லை ஆனால் நான் பாடிய வீடியோ வை வைத்து விட்டார்கள், அதன் பின் கேட்கையில் படத்தில் அந்த பாடல் இடம்பெறும் அதில் உங்கள் குரல் வரும்னு சொன்னாங்க. நான் வேற பெருமையா சோசியல் மீடியாவில் சொல்லிட்டேன் பாத்து பண்ணுங்க என்று சொன்னேன்.. அது வேடிக்கையாக இருந்தது.” அதன் பின் ‘காசே தான் கடவுளடா’ படலை தன் குரலில் பேட்டியில் பாடி அசத்தியிருப்பார் மஞ்சு வாரியார்.  

மேலும் படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை படத்தின் நாயகி மஞ்சு வாரியார் பகிர்ந்து கொண்ட முழு காணொளி இதோ..