தென்னிந்தியாவின் உச்ச நட்சத்திரங்களில் மிக முக்கியமானவர் தளபதி விஜய், பல லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள விஜய் பாக்ஸ் ஆபிஸ் ன் சாம்ராட்டாக அறியப்படுகிறார். தொடர்ந்து விஜய் திரைப்படம் வெளியாகும் என்றால் திருவிழா நாட்கள் போல காட்சியளிக்கும் அந்தளவு அவரது ரசிகர்களின் ஆர்ப்பரிப்பு இருக்கும். அவரது முந்தைய திரைப்படமான வாரிசு திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தையடுத்து வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன்படி 300 கோடி ரூபாய் உலகெங்கிலும் வசூல் செய்து இந்த ஆண்டின் மிகபெரிய திரைப்படம் என்ற பெருமையை பெற்றது. படம் வெளியாகி ஒரு மாதம் ஆன போதிலும் பல இடங்களில் விஜயின் வாரிசு திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருகின்றது.

இந்நிலையில் விஜய் வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து நடித்து வரும் திரைப்படம் ‘லியோ’ இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொண்டுள்ளது. காரணம் ஏற்கனவே தளபதியுடனான் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. மேலும் லோகேஷ் கனகராஜின் முந்தைய திரைப்படமான ‘விக்ரம்’ இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன்படி விஜய் – லோகேஷ் கூட்டணி மீது பிரம்மாண்ட எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதிரடியாய் கூட்டணி அமைத்திருக்கும் லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீர் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. படக்குழுவினருடன் தனி விமானத்தில் பறந்த படக்குழுவினர் மும்முரமாக பட வேளைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் காஷ்மீர் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

புகைப்படத்தில் தளபதி விஜய், லோகேஷ் கனகராஜ், இயக்குனரும் நடிகருமான கெளதம் மேனன், மேத்திவ் தாமஸ், சண்டை பயிற்சியாளர் அன்பரசு மற்றும் பட தயாரிப்பாளர் லலித் குமார், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஆகியோர் நெருப்பின் முன் நின்று கொண்டிருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் SS.லலித்குமார் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரிக்கும் லியோ திரைப்படத்தின் தளபதி விஜய் உடன் இணைந்து திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ஆக்ஷன் கிங் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்தீவ் தாமஸ், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.