தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2005 ல் வெளியான திரைப்படம் திருப்பாச்சி. இப்படத்தின் மிகப்பெரிய வெற்றி படத்தில் நடித்திருந்த கதாபாத்திரங்களின் உருவாக்கம் மிகப்பெரிய காரணம். காலம் கடந்தும் அப்படத்தின் கதாபத்திரங்களின் பெயர் மக்களிடம் பிரபலமாகவே உள்ளது. அதில் குறிப்பாக படத்தின் முக்கிய வில்லன் ‘சனியன் சகடை’ கோட்டா ஸ்ரீனிவாசராவ் இந்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்து படத்திற்கு மிகப்பெரிய வலு சேர்த்தவர். மேலும் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான ‘சாமி’ படத்தில் ‘பெருமாள் பிச்சை’ கதாபாத்திரத்தை தெரியாத 90 களில் வளர்ந்த மக்கள் இன்று கிடையாது. அந்த வகையில் அவரது மிகப்பெரிய உழைப்பை அந்த கதாபாத்திரத்தில் ஈடுபடுத்தி அட்டகாசமாக கொடுப்பவர். கோட்டா ஸ்ரீனிவாசராவ் தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களில் பல படங்களில் வில்லனாகவும் குணசித்திர கதாபாத்திரத்திலும் காமெடி கதாபாத்திரத்திலும் நடித்தவர்.

கிட்டத்தட்ட 700 படங்களுக்கு மேல் நடித்த மிகப்பெரிய ஆளுமை என்றே சொல்லலாம். இவர் தமிழில் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி பெற்றது என்று சொன்னால் அதற்கு மிக முக்கிய காரணமாக இவராகத்தான் இருக்க கூடும். அந்த அளவு படத்திற்கு சிறப்பான நடிப்பை கொடுத்திருப்பார். அதன்படி அவர் நடிப்பில் வெளியான ‘சாமி’, ‘ஏய்’, ‘குத்து’ஆகிய படங்களில் நடித்துள்ளார். திரைத்துறையில் அடியெடுத்து வைத்து விஜயவாடா கிழக்கு பகுதியில் சட்டபேரவை உறுப்பினராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் இதுவரை 30 க்கும் மேற்பட்ட பல படங்களில் நடித்த நடிகர் ஸ்ரீனிவாசராவ் சமீபத்தில் இறந்து விட்டதாக செய்தி முன்னதாக பரவி வந்தது. 80 வயதை கடந்த கோட்டா ஸ்ரீனிவாசராவ் வயது மூப்பு காரணமாக இறந்தார் என்ற செய்தி மிகப்பெரிய அளவு பரவியது.

இதனையடுத்து விசாரணையில் கோட்டா ஸ்ரீனிவாசராவ் உயிரோடுதான் இருக்கிறார் என்ற உண்மை தெரிய வந்தது. இந்நிலையில் கோட்டா ஸ்ரீனிவாசராவ் சார்பில் தன்னுடைய மரணம் குறித்த செய்தி பொய்யானது என்றும் அதை ரசிகர்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் ஆச்வசப் படுத்தி கொண்டு கோட்டா ஸ்ரீனிவாசராவ் மேலும் பல ஆண்டுகள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று தங்களது விருப்பங்களை வீடியோவை பகிர்ந்த வண்ணம் தெரிவித்து வருகின்றனர்.