தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சூர்யா.பல தசாப்தங்களாக ரசிகர்களை தன் நடிப்பினால் உற்சாகப்படுத்தி தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர். சூர்யா படம் வெளியாவதென்றால் தனி சிறப்பு தன்னாலே உருவாகி விடும். குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக சூர்யா படத்தின் மீது தனி எதிர்பார்ப்பு உருவாகி விடுகிறது. கடந்த 2020 ல் வெளியான சூரரைப் போற்று திரைப்படத்தையடுத்து சூர்யா எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் பிளாக்பஸ்டரை அவருக்கு கொடுக்கிறது. சூரரைப் போற்று படத்தை தொடர்ந்து ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்கள் வெளியானது. இதில் ஜெய்பீம் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றி பெற்றது. எதற்கும் துணிந்தவன் தென் தமிழக பகுதிகளில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் கடந்த ஆண்டு வெளியான ‘விக்ரம்’ திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் சில நிமிடம் கௌரவ தோற்றத்தில் சூர்யா ரோலக்ஸாக வந்து மிரட்டியிருப்பார். மிகப்பெரிய வரவேற்பு பெற்ற அந்த காட்சி இந்தியளவு மிகப்பெரிய அளவு பேசப்பட்டது.

தற்போது சூர்யா இயக்குனர் சிறுத்தை சிவா உடன் இணைந்து ‘சூர்யா 42’ படத்தில் நடித்து வருகிறார். 10 மொழிகளில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படத்தின் முதல் பார்வை முன்னதாக வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது. தற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் படம் வெளியாகவுள்ளது. மேலும் சூர்யா இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தயாரிப்பாளர் எஸ் தானு தயாரிப்பில் உருவாகி வரும் ‘வாடிவாசல்’ திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் முன்னோட்டம் சூர்யா பிறந்த நாளில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

இந்நிலையில் நடிகர் சூர்யா மும்பையில் கிரிக்கெட்டின் கடவுள் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கரை இன்று காலை சந்தித்துள்ளார். திடீர் சந்திப்பின் காரணம் என்னவென்று தெரியவில்லை. இந்த சந்திப்பின் புகைப்படத்தை நடிகர் சூர்யா தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதனுடன் “மரியாதை – அன்பு” என்று குறிப்பிட்டுள்ளார் சூர்யா.

அதனையடுத்து சூர்யா – சச்சின் புகைப்படம் இணையத்தில் மிகப்பெரிய அளவு இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.

இன்று காலை சூரிய உதயம் விசேஷமாக இருந்தது 😃. உங்களை சந்தித்தது அற்புதமாக இருந்தது, @Suriya_offl. மனமார்ந்த வாழ்த்துக்கள். pic.twitter.com/LYrKeBZHEl

— Sachin Tendulkar (@sachin_rt) February 16, 2023

மேலும் சூர்யாவை தொடர்ந்து சச்சின் டெண்டுல்கர் சூர்யாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அதனுடன் தமிழில் , "இன்று காலை சூரிய உதயம் விசேஷமாக இருந்தது. உங்களை சந்தித்தது அற்புதமாக இருந்தது மனமார்ந்த வாழ்த்துகள்" என்று சூர்யாவை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார் சச்சின். இதனையடுத்து சூர்யா பதிவு போல் சச்சின் பதிவும் வைரலாகி வருகிறது.