6 வயது பெண் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது,

"ஹார்மோன்களின் ஆட்டம்” காமம் என்றால், “முலைச்சு மூணு இலை விடாத சிறுவர்களிடம் கூட, காமம் வருவதை, இந்த சமூகத்தில் என்ன வென்று சொல்வது?”

பெற்றோரின் பரம்பரை ஜீன் என்று சொல்லலாமா?
குடும்பம் குடும்பமாகத் தொடரும் பாரம்பரியம் என்று சொல்லலாமா?
பெற்றோரின் வளர்ப்பு என்று சொன்னதால் தகுமா?
அல்லது, இந்த வகை காமத்தை வேறு என்னவென்று குற்றம் சாட்டுவது?

திரிபுரா மாநிலம் கோமதி மாவட்டம் கோரகப்பா கிராமத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி, அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்து வந்தார்.

இந்த சிறுமியும், பக்கத்து வீட்டில் உள்ள 6 வயது சிறுமியும் நெருங்கிய தோழிகள் என்பதால், இருவரும் தினமும் வீட்டின் அருகில் உள்ள வனப்பகுதியில் விளையாடுவது வழக்கம்.

சம்பவத்தன்று, வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்த சிறுமி, தன் சக தோழியைத் தேடி, அருகில் உள்ள வனபகுதியிக்குள் சென்றார்.

அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த கச்ஹாச்லா என்ற இளைஞர், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்துள்ளார்.

இதனிடையே. சிறுமியை வெகு நேரமாகக் காணவில்லை என்பதால், சந்தேகப்பட்டு அவருடைய பெற்றோர் வனப்பகுதிக்குள் தேடிப்பார்த்துள்ளனர்.

அப்போது, சிறுமி அங்கே ரத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். இதனைப்பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், கதறி அழுதனர்.

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் விரைந்து வந்தனர். பின்னர், சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது, சிறுமி பாலியல் பலாத்கார தொல்லைக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அப்பகுதியைச் சேர்ந்த கச்ஹாச்லா என்பவரை போலீசார் அழைத்து விசாரணை நடத்தி உள்ளனர்.

அப்போது, குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது, குழந்தை இறந்துவிட்டதை அவன் ஒப்புக் கொண்டான். இதையடுத்து அவனைக் கைது செய்த போலீசார், தனிப்பட்ட முறையில் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.