ஓரினச்சேர்க்கையால் புழல் சிறையில் பயங்கர மோதல் ஏற்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை புழல் சிறையில் ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், 57 வயதான முத்துசாமி, 30 வயதான சக்திவேல் ஆகிய இருவரும் ஒரே அறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இதனிடையே, முத்துசாமியை ஓரினச்சேர்க்கைக்கு வரும்படி சக்திவேல் அழைத்ததாகத் தெரிகிறது. ஆனால், அவர் வர மறுத்ததால், இருவருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக்கொண்டனர்.

பின்னர், இருவரும் ஒருவரை ஒருவர் பிளேடால் அறுத்துக்கொண்டனர். இதனால், இருவரும் ரத்த வெள்ளத்தில் சத்தம் போட்டுக் கூச்சலிட்டு அலறித்துடித்தனர்.

கைதிகள் அலறும் சத்தம் கேட்டு விரைந்து வந்த போலீசார், இருவரையும் மீட்டு புழல் சிறையிலேயே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும், இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ஓரினச்சேர்க்கைக்கு அழைத்த விவகாரம் போலீசாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து, இருவரையும் தனித் தனி அறையில் அடைக்க சிறைத்துறை நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, புழல் சிறையில் ஓரினச்சேர்க்கைக்கு அழைத்த விவகாரத்தில், கைதிகள் 2 பேர் ஒருவரை ஒருவர் பிளேடால் அறுத்துக்கொண்டு மோதிக்கொண்ட சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.