காதலனை கழற்றிவிட்ட காதலியை பழிவாங்க, காதலியின் தங்கைக்கு அக்காவின் ஆபாச படத்தை அனுப்பிய காதலன் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.

“காதல், இதுவும் கடந்துபோகும்!” என்பது போலதான், இன்றைய காதல் எந்த வித தியாக மனப்பான்மையும் இல்லாமல், ஊனத்தைப் போல முடங்கிக் கிடக்கிறது. அதற்கு சாட்சி சொல்கிறது, கோவையைச் சேர்ந்த காதல் ஜோடி ஒன்று...

கோவை சிங்காநல்லூர் விவேகானந்தா தெருவைச் சேர்ந்த ரூபன், வீடு கட்டி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரும், இதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரும் கடந்த 3 ஆண்டுகளாக உயிருக்கு உயிராகக் காதலித்து வந்துள்ளனர்.

கடந்த 3 ஆண்டுகளும் இருவரும் பல முறை தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்துள்ளனர். இதில், பலமுறை அவர்கள் இருவரும் உல்லாசம் அனுபவித்ததை ரூபன், தன் செல்போனில் வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டதாகத் தெரிகிறது.

இந்நிலையில், காதலன் - காதலி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. காதலனின் செயல்பாடுகளால் வெறுத்துப்போன அந்த பெண், காதலனைக் கழற்றிவிட்டுள்ளார்.

இதனால், கடும் ஆத்திரமடைந்த காதலன், அவர்கள் இருவரும் ஒன்றாக உல்லாசம் அனுபவித்த ஆபாச படத்தை, காதலியின் தங்கைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதனைப் பார்த்து, அதிர்ச்சியடைந்த காதலியின் தங்கை, தனது பெற்றோரிடம் கூறி, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், ரூபனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காதல், இதுவும் கடந்துபோகும்!
கடந்துபோவது, அன்பா? காமமா? என்பது தான் இங்கே கேள்வி..