15 வயது பள்ளி மாணவியைக் கடத்தி, மாலை முதல் மறுநாள் காலை வரை கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

“தாம்பத்தியமே, துணையின் அனுமதியோடு விருப்பத்தோடு செய்யும் ஒரு உன்னத விசயம். ஆனால், காம இன்பம் வழிந்தோடி, அதை வயதுக்கு வராத இளம் பிஞ்சுகளிடம் அடித்துத் துன்புறுத்தி, தட்டிப் பறித்துக் கொள்வதில் அப்படி என்ன அல்ப சுகம் இருக்கப் போகிறது?!

அது, சுயநலத்தின் சுய இன்பம் அல்லவா?!

ஆனால், அப்படிப்பட்ட சுயநலமான இன்பத்தைத் தான் பல ஆண்களும், பெண்களுக்குத் தர நினைக்கிறார்கள். பாடுபட்ட சமூகம் இன்று, பாலியல் சுகத்திற்கு அடிபணிந்து கிடக்கிறது.

இன்பத்திற்கு நித்தம் ஏங்கித் தவிக்கும் இந்த சமூகம், இன்பம் கிடைக்கக் கொஞ்சம் தாமதமானாலும், திருடியாவது, தட்டி பறித்தாவது, அந்த இன்பத்தை அடையத் துடிப்பது.. மடமையிலும் சிறுமை.”

நீலகிரி மாவட்டம் தும்பிமலையை சேர்ந்த 26 வயதான முரளி மற்றும் அவரது நண்பர் 28 வயதான கோகுல்ராஜ், ஆகிய இருவரும், சோலூர் மட்டம் வழியாக காரில் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாகப் பள்ளி முடிந்து, 15 வயது மாணவி, வீட்டிற்குச் செல்வதற்காக நடந்து சென்றுகொண்டிருந்தார்.

மாணவி, தனியாக நடந்து செல்வதைப் பார்த்ததும், இருவரும் காரை நிறுத்திவிட்டு, மாணவியிடம் சென்று எதையோ கேட்பது போல், பேச்சு கொடுத்துள்ளனர். அதற்கு, மாணவியும் பதில் சொல்லிக்கொண்டிருந்தார்.

திடீரென்று, மாணவியின் வாயை மூடி, கண் இமைக்கும் நேரத்தில், அந்த மாணவியை காரில் கடத்துகின்றனர்.

பின்னர், காமம் தலைக்கேறிய நிலையில், காரில் வைத்தே, இருவரும் மாறி மாறி அந்த இளம் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்கின்றனர்.

ஆனாலும், அவர்கள் இருவருக்கும் காமம் அடங்கவில்லை. இளம் பெண்ணை பார்க்கும்போதெல்லாம், அவர்களுக்குத் தேகம் நிமிடத்திற்கு நிமிடம் எட்டி பார்த்துப்பார்த்துள்ளது.

இதனையடுத்து, அந்த பெண்ணை மிரட்டி, அந்த பகுதியில் உள்ள தனியார் லாட்ஜில் ரூம் போட்டு, இரவு முழுவதும் மாறி மாறி அந்த இளம் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்கின்றனர்.

முதல் நாள் மாலை முதல், மறுநாள் அதிகாலை வரை பாலியல் இன்பம். அந்த இருவருக்கும் உடல் சோர்ந்து போகிறது.

இதனையடுத்து, அதிகாலை நேரத்தில், அந்த பெண்ணை கடத்திய இடத்திலேயே மீண்டும் காரில் வந்து இறக்கிவிட்டு செல்கின்றனர்.

பின்னர், அங்கிருந்து நடக்க முடியாமல் வீடு திரும்பிய மாணவி, தனக்கு நேர்ந்த அவலங்களை அழுது கதறியபடியே, தன் பெற்றோர்களிடம் கூறி உள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அவர்கள், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கின்றனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து, முரளி மற்றும் கோகுல்ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இன்பம், கொடுப்பதில் மட்டும் அல்ல, பெறுவதிலும் இருக்கிறது. ஆனால், அதை விருப்பத்தோடு பகிர்ந்துகொள்வது அனைவருக்கும் நலம்.