கர்பமானது குறித்து கண்ணீர் விட்ட பிக்பாஸ் பங்கேற்பாளர் ! அரவணைத்த வீட்டினர்
By Sakthi Priyan | Galatta | June 26, 2019 12:05 PM IST
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மக்கள் உள்ளம் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். முதல் இரண்டு சீசன்கள் ஒளிபரப்பாகி முடிந்த நிலையில், தற்போது மூன்றாம் சீசன் துவங்கியது. கடந்த இரு சீசன் போலவே இந்த சீசனையும் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.
பிக் பாஸ் 3-க்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று அசத்தலாக துவங்கியது. தண்ணீர் மற்றும் எரிவாயுவிற்கு மீட்டர் பொறுத்தப்பட்டுள்ளது. நேற்று புதிதாக மாடல் மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.
தற்போது வெளியான ப்ரோமோவில் ரேஷ்மா தனது வாழ்க்கையில் நிகழ்ந்த கசப்பான நிகழ்வு குறித்து பகிர்ந்துள்ள்ளார். 9 மாதம் கர்பமாக இருந்த நேரத்தில் குழந்தையை தொலைத்த சோக சம்பவம் குறித்து கூறியபோது, வீட்டில் உள்ள பங்கேற்பாளர்கள் அனைவரும் ஆறுதல் கூறி அரவணைத்தனர்.