நடிகர் மாதவன் விஞ்ஞானியா ?
By Sakthi Priyan | Galatta | October 29, 2018 12:57 PM IST
இந்திய விண்வெளி மையத்தில், திரவ எரிபொருளை பயன்படுத்தி ராக்கெட் வடிவமைத்தலில் முக்கிய விஞ்ஞானியாகப் பணியாற்றியவர் நம்பி நாராயணன் அவர்கள்.
பணம் பெற்று கொண்டு ராக்கெட் ரகசியங்களை வெளியே தெரிவித்துவிட்டார் என்று கடந்த 1994-ம் ஆண்டு கைது செய்து அவரை விசாரணை என்று அடித்து கொடுமைப் படுத்தியுள்ளார்கள். இவ்வாறு போலீசார் இவரை துன்புறுத்தியதால் இவர் மீதான வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது.
விசாரித்ததில் இவரின் மேல் எந்த ஒரு தவறும் இல்லை என்று நிரூபிக்கப்பட்டது. முக்கிய பொறுப்பு வழங்கப்படாததால், 2001-ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றார் நம்பி நாராயணன்.
தன் மீது குற்றம் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி வழக்கு தொடுத்து, 20 ஆண்டுகளாக போராடி வருவோரின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்க திட்டமிட்டுள்ளார்கள். நம்பி நாராயணன் வேடத்தில் மாதவன் நடிக்க இருக்கிறார்.
இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாக உள்ளது. இப்படத்தை ஆனந்த் மகாதேவன் இயக்குகிறார். இந்த வருட இறுதியில் படபிடிப்பு தொடங்கும் எனத் எதிர் பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து இப்படத்தின் டீஸர் வரும் அக்டோபர்-31 ஆம் தேதி வெளியாகிறது. மேலும் இவ்விழாவிற்கு ரசிகர்களுக்கு அழைப்புவிடுத்தார் மாதவன். இறுதிச்சுற்று, விக்ரம் வேதா படங்களுக்கு பிறகு மாதவன் நடிப்பில் தயாராகும் இப்படம் திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறத்