தனுஷ்-கார்த்திக் சுப்புராஜ் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு !
By Aravind Selvam | Galatta | July 19, 2019 12:45 PM IST
பேட்ட படத்தின் வெற்றியை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் அடுத்து என்ன செய்ய போகிறார் என்ற ஆவலோடு மொத்த தமிழ் சினிமாவும் காத்திருக்கிறது.தனுஷை வைத்து இவர் இயக்கயிருந்த படம் சில காரணங்களால் தள்ளிப்போனது.
தற்போது இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் லண்டனில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.Y Not ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர்.
மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி ஹீரோயினாக நடிக்கிறார்.சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்ககிறார்,இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.