ஈரம் படத்தை தொடர்ந்து அடுத்த ஹாரர்-த்ரில்லருக்கு ரெடியாகும் இயக்குனர் !
By Sakthi Priyan | Galatta | March 14, 2019 13:04 PM IST
தமிழ் சினிமாவில் ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்து அதற்கு ஏற்றவாறு அசத்தலான படைப்புக்களை தரும் இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் அறிவழகன். இவரது இயக்கத்தில் வெளியான ஈரம், வல்லினம், ஆறாது சினம், குற்றம் 23 போன்ற சிறப்பான படங்கள் கொண்டு ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கிறார்.
இவரது அப்டேட் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், நம் கலாட்டா குழு தொலைபேசி வாயிலாக இவரை தொடர்பு கொண்டது. பேசுகையில், ஹாரர்-த்ரில்லர் படம் இயக்க திட்டமிட்டுள்ளதாகவும்.
இதில் நடிகர் ஆதி முக்கிய பாத்திரத்தில் நடிப்பார் என்ற தகவலையும் நம்முடன் பகிர்ந்தார். இப்போதைக்கு ஹீரோயின் மற்றும் மற்ற நட்சத்திரங்கள் முடிவாகவில்லையாம். விரைவில் இதுகுறித்த சுவாரஸ்ய தகவலுடன் வருகிறேன் என்று கூறினார்.
படம் எப்படி இருக்கும் என்று கேட்டபோது, நிச்சயம் ஈரம் போல் வரும் என்று கூறினார். இச்செய்தி அறிந்த ரசிகர்கள் நல்ல படைப்பிற்காக காத்திருக்கின்றனர். இப்படமும் சீரான வரவேற்பை பெற கலாட்டா சார்பாக வாழ்த்துகிறோம்.