நிவாரணபணியில் ஈடுபடும் கேப்டன் விஜயகாந்த் !
By Sakthi Priyan | Galatta | November 21, 2018 13:06 PM IST
கஜா புயல் தாக்கியதில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த உயிர் மற்றும் பொருட் சேதம் ஏற்பட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
புயல் சேதத்தை மதிப்பிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு உதவ திரையுலக பிரபலங்கள் பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
கரம் கோர்ப்போம் ! #கஜாபுயலால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைப்போம்!#SaveDelta #DMDK4thePeople pic.twitter.com/2Brb65xECD
— Vijayakant (@iVijayakant) November 21, 2018
இந்நிலையில் நேற்று கேப்டன் விஜயகாந்த் குடும்பத்தினர் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் விரைந்து தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். தற்போது கேப்டன் ரூபாய் ஒரு கோடி வழங்கி நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார். அதுமட்டுமல்லாமல் கரம் கோர்ப்போம் என்றும் தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
#கஜாபுயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு
— Vijayakant (@iVijayakant) November 21, 2018
தேமுதிக சார்பில் ஒரு கோடி ரூபாய்க்கு
நிவாரணப்பொருட்கள் வழங்கப்படும்! #SaveDelta #DMDK4thePeople pic.twitter.com/JT5bGx8di0