மார்ச் 5-ம் தேதியில் ஆயிரத்தில் ஒருவன் ! செல்வராகவனின் செழிப்பான படைப்பு
By Sakthi Priyan | Galatta | February 23, 2019 17:19 PM IST
திரையுலகிற்கு பல அற்புதமான படைப்புகளை தந்த இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் செல்வராகவன். காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கிறார்.
இவரது படங்கள் வெறும் படங்களாக இல்லாமல், பாடமாகவும் இருந்து வருகிறது. தனது தரமான ஸ்கிரிப்ட்டுகள் மூலம் தமிழ் சினிமாவின் ஜீனியஸ் என்று அழைக்கப்படுகிறார். திரைக்கும் ரசிகர்களுக்கும் உள்ள தூரத்தை குறைப்பதில் இவருக்கு நிகர் இவரே.
இவர் இயக்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான படம் ஆயிரத்தில் ஒருவன். தமிழ் சினிமா வரலாற்றை திரும்பி பார்க்க வைத்த படம் என்றும் புகழலாம். கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா, பார்த்திபன், அழகம்பெருமாள், பிரதாப் போத்தன் போன்ற நடிகர்களின் சீரான நடிப்பில் அனைவரையும் ஈர்த்தது.
படம் வெளியான தருணத்தில் இதன் அருமையும், மகிமையும் புரியாதோர் பின்பு உணர துவங்கினர். உண்மையிலேயே சினிமா விரும்பிகள் அனைவருக்கும் இந்த ஆர்வம் உள்ளது. ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மூலம் நம்மை சோழ தேசம் அழைத்து சென்றவர் இயக்குனர் செல்வராகவன், விரைவில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை துவங்குவார் என எதிர்பார்க்கலாம்.
தற்போது சென்னையில் அமைந்துள்ள பிரபல திரையரங்கமான GK சினிமாஸ், மார்ச் 5-ம் தேதி ஆயிரத்தில் ஒருவன் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். நல்ல படைப்பு என்றும் நிலைக்கும் என்பதற்கு இந்நிகழ்வு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு.
Here's our bday gift to genius filmmaker @selvaraghavan This film has a seperate fan base, to celebrate it we are releasing #AayirathilOruvanatGK on Selva sir's bday. Bookings to open tomorrow evening. #PlaybavkatGK pic.twitter.com/xyTs21iNe3
— Ruban Mathivanan (@GKcinemas) February 23, 2019