வீடியோ பகிர்வு செயலியான டிக்-டாக்கின் தாய் நிறுவனமான ByteDance மற்றும் WeChat செயலியின் நிறுவனமான Tencent ஆகியவற்றுடனான அமெரிக்காவின் வர்த்தக பரிமாற்றங்களை இன்னும் 45 நாட்களில் தடை செய்வதற்கான நிர்வாக உத்தரவுகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donal Trump) பிறப்பித்தார்.

அமெரிக்க டிஜிட்டல் நெட்வொர்க்குகளிலிருந்து "நம்பத்தகாத" சீன செயலிகளை அகற்றுவதற்கான முயற்சிகளை முடுக்கிவிட்டப்போவதாக இந்த வாரம் டிரம்ப் நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து இந்த உத்தரவுகள் வந்துள்ளன. சீனாவிற்கு சொந்தமான குறுகிய வீடியோ செயலியான டிக்-டோக் மற்றும் மெசஞ்சர் செயலியான WeChat குறிப்பிடத்தக்க அச்சுறுத்தல்களாக உள்ளன என்று டிரம்ப் நிர்வாகம் கூறியுள்ளது. “சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு பயனளிக்கும் தவறான பிரச்சாரங்களுக்கு Tik Tok  செயலி பயன்படுத்தப்படலாம். மேலும் அமெரிக்காவில் நாம் நமது தேசிய பாதுகாப்பைப் பாதுகாக்க டிக்டாக்கின் உரிமையாளர்களுக்கு எதிராக ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று டிரம்ப் ஒரு உத்தரவில் தெரிவித்தார்.

“WeChat தானாகவே அதன் பயனர்களிடமிருந்து ஏராளமான தகவல்களை எடுக்கிறது. இந்த தரவு சேகரிப்பு சீன கம்யூனிஸ்ட் கட்சி அமெரிக்கர்களின் தனிப்பட்ட மற்றும் தனியுரிம தகவல்களை அறிந்துகொள்ள உதவுகிறது.” என்று அமெரிக்க அதிபரின் அறிக்கை தெரிவிக்கிறது. இந்த உத்தரவு அமெரிக்காவில் WeChat ஐ 45 நாட்களில் தடைசெய்யும்.

இந்த வார துவக்கத்தில், டிரம்ப், டிக்-டாக்கின் அமெரிக்க வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் மைக்ரோசாஃப்ட் கார்பரேஷனுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தத் தொகையில் அமெரிக்க அரசாங்கத்திற்கு கணிசமான தொகை கிடைத்தால் தான் இந்த வர்த்தகத்திற்கு ஆதரவு அளிக்கக்கூடும் என கூறியிருந்தார்.

எனினும், செப்டம்பர் 15 முதல் டிக்-டாக் அமெரிக்காவில் தடை செய்யப்படும் என்பதையும் அமெரிக்க அதிபர் தொடர்ந்து கூறி வருகிறார்.

இது தொடட்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு டென்சென்ட் மற்றும் பைட் டான்ஸ் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டன.

அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான ட்விட்டர் சீன வீடியோ பகிர்வு செயலியான டிக் டாக்-கை கையகப்படுத்தும் ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தையை தற்போது நடத்தியிருப்பதாக கூறப்படுகிறது. இது போன்ற எந்தவொரு ஒப்பந்தமும் கடுமையான தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று தோன்றுகிறது என்பதால், டிக் டாக்-கை வாங்குவதற்கான தனது திட்டத்துடன் ட்விட்டர் முன்னேறுமா என்பதைப் பார்க்க வேண்டும் என்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது.
 
அமெரிக்கா சீனா கருத்து மோதல்களுக்கு இடையே நாளுக்கு நாள் பதற்றம் கூடித்துக் கொண்டே போகிறது. இந்த நிலையில் TikTok-கை கையகப்படுத்த மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது. TikTok-கை அமெரிக்க நிறுவனம் வாங்கினால் பிரச்சனை இல்லை. இல்லையேனும், அதற்கு செப்டம்பர் 15 வரை கால அவகாசம் வழங்குவதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து இருந்தார். 

மேலும், இந்த குறிப்பிட்ட காலத்தில் சூமுக ஒப்பந்தம் போடப்படாவிட்டால், அதற்கு தடை விதிப்பேன் என்றும் கூறியிருந்தார். இதற்கிடையில் தான் டிக் டாக்கிற்கு தடை விதிக்கும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இது குறித்த அறிக்கையில் நமது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக டிக்-டாக்கின் உரிமையாளர்கள் மீது தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. TikTok நிறுவனம் சீன அரசால் கட்டுப்படுத்தப்படுவதாகவும், அது பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்களை சீனாவுடன் பகிர்ந்து கொள்வதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டினார். ஆக இதனை எதிரொலிக்கும் விதமாகத் தான் இந்த தடை உத்தரவிலும் கையெழுத்திட்டுள்ளார்.

ஆகஸ்ட் 2 ஆம் தேதி, மைக்ரோசாப்ட் அதன் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா அதிபர் டிரம்புடன் TikTok கையகப்படுத்தல் குறித்து பேசியதாகக் கூறியிருந்தார். இதில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நியூசிலாந்தில் டிக்டோக் நடவடிக்கைகள் அடங்கும். மைக்ரோசாப்ட் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் பேச்சுவார்த்தைகளை முடிக்க திட்டமிட்டுள்ளது