மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் தளபதி விஜய் திடீர் சந்திப்பு... காரணம் இதுதான்! விவரம் உள்ளே

மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் தளபதி விஜய் திடீர் சந்திப்பு,thalapathy vijay met his fans makkal iyakkam members | Galatta

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்ட நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராக திகழும் தளபதி விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது திரைப் பயணத்தில் 67வது திரைப்படமாக தயாராகும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் காஷ்மீரில் 50 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்றது. இதனைத் தொடரந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியிடாக லியோ திரைப்படத்தை வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். வரும் ஜூன் 22 ஆம் தேதி தளபதி விஜயின் பிறந்தநாளன்று லியோ திரைப்படத்தின் முக்கிய அப்டேட்டாக பெரிய சர்ப்ரைஸ் ஒன்று ரசிகர்களுக்கு விருந்தாக வர இருக்கிறது. இன்னும் இதர அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் தளபதி விஜய் அவர்கள் தனது ரசிகர்களின் படை கொண்டு உருவாக்கிய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். சமீப காலங்களில் தொடர்ந்து தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளையும் ரசிகர்களையும் தளபதி விஜய் சந்தித்து வருகிறார். முன்னதாக ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் தளபதி விஜயின் விஜய் மக்கள் இயக்கத்தை சார்ந்த நிர்வாகிகள் போட்டியிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது மக்கள் இயக்கத்தின் வாயிலாகவும் தனது ரசிகர்களின் வாயிலாகவும் தொடர்ச்சியாக நற்பணிகளை மேற்கொண்டு வரும் தளபதி விஜய் சமீபத்தில் தனது மக்கள் இயக்கத்தின் சார்பில் இரத்த தானத்தை முன் நிறுத்தி தளபதி விஜய் குருதியகம் எனும் செயலியை தொடங்கினார். தளபதி விஜய் மற்றும் அவரது ரசிகர்களின் இந்த செயல்பாட்டிற்கு பாராட்டுகள் குவிந்தன.

இதன் தொடர்ச்சியாக தளபதி விஜயின் ரசிகர்கள் தானாக முன்வந்து தொடங்கிய ஒரு நலத்திட்டம் தான் விலை இல்லா விருந்தகம். இந்த விலை இல்லாவிருந்தகம் நலத்திட்டத்தின் வாயிலாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தளபதி விஜய் ரசிகர்கள் மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கி வருகின்றனர். ரசிகர்களின் இந்த செயல்பாட்டை ஊக்குவிக்க முடிவு செய்த தளபதி விஜய் 300க்கும் மேற்பட்ட ரசிகர்களை இன்று ஏப்ரல் 28ஆம் தேதி பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் நேரில் சந்தித்து அவர்களை பாராட்டியிருக்கிறார். மேலும் அவர்களோடு பேசிய தளபதி விஜய் அவர்கள் இந்த நலத்திட்டத்தை எக்காரணம் கொண்டும் நிறுத்தாமல் தொடர்ந்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டதாகவும் பண உதவி தேவைப்பட்டால் கேளுங்கள் கட்டாயமாக நான் செய்கிறேன் என்று தெரிவித்திருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. மேலும் இன்னும் பல நலத்திட்டங்கள் மக்கள் இயக்கத்தின் சார்பில் செய்ய முடிவெடுத்திருப்பதாகவும் அதற்கு தொடர்ந்து ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் தளபதி விஜய் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. இந்த சந்திப்பு குறித்த மற்ற தகவல்கள் அடுத்தடுத்து வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி விஜய் மற்றும் அவர்கள் ரசிகர்களின் இந்த செயல்பாடும் மக்கள் மத்தியில் தற்போது பாராட்டுகளை பெற்று வருகிறது.
 

விஜயவாடாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்த நந்தமுரி பாலகிருஷ்ணா! காரணம் என்ன?- வைரல் புகைப்படங்கள் இதோ!
சினிமா

விஜயவாடாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்த நந்தமுரி பாலகிருஷ்ணா! காரணம் என்ன?- வைரல் புகைப்படங்கள் இதோ!

கஸ்தூரியின் சர்ச்சைக்குரிய கேள்வி... 'காதலுக்கு மரியாதை' என பதிலளித்து ARரஹ்மான் செய்த தரமான சம்பவம்!
சினிமா

கஸ்தூரியின் சர்ச்சைக்குரிய கேள்வி... 'காதலுக்கு மரியாதை' என பதிலளித்து ARரஹ்மான் செய்த தரமான சம்பவம்!

பொன்னியின் செல்வன் படத்திற்கு அடித்தளமாக அமைந்த தளபதி பட பாடல்... உண்மையை உடைத்த தோட்டா தரணி! ட்ரெண்டிங் வீடியோ இதோ
சினிமா

பொன்னியின் செல்வன் படத்திற்கு அடித்தளமாக அமைந்த தளபதி பட பாடல்... உண்மையை உடைத்த தோட்டா தரணி! ட்ரெண்டிங் வீடியோ இதோ